Monday, August 25, 2008

"தாயகம்" அதிகாரங்களைப் பேசுகிறது

--------------------------தீபச்செல்வன்
----------------------------------------------------------------------------------------------------------------------
தாயகம் கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் ஜீலை-செப்ரம்பர்2008 வெளிவந்திருக்கிறது. அதிகாரங்களிடமிருந்து சுயங்களைக் காக்கும் தன்மையும் அதிகாரத்தின் பல்வேறு கூர்மையான முகங்களையும் அதிலிருந்தான எழுச்சியையும் தாயகம் பேசுகிறது. தாயகம் இதழ் தொடர்ந்து தனது முகத்தை வலிமைப்படுத்தி புதிய வாழ்வு ஒன்றை உருவாக்க முனைகிறது. சமூகத்தில் அரசியல் பொருளாதார தன்மைகளை மிக எளிமையாக எடுத்து பேசுகிறது. உலக அரசியல் அதிகாரங்கள் எமது சுயங்களையும் உரிமைகளையும் விழுங்கும் தன்மையும் அது கல்வி பொருளாதாரம் சமயம் என்று தனது மேலாதிக்கம் கையாளும் மயங்களையும் துணிந்து பேசுகிறது.

அதன்படி 'இரும்புத்திரையும் மாயத்திரையும்' எனவும் 'உதவுங் கரங்களும் உதைக்கும் கால்களும்' எனவும் ஆசிரியர் உரைகள் எழுதப்பட்டுள்ளன.

கவிதைகள்
------------------------------------
சு.சுகனேசன்-அவர்கள் பார்வையில்
வே.மகேந்திரன்-மீள வருவோம்
ம.பா.மகாலிங்கசிவம்- எலிச் சுத்திகரிப்பு
கிருஷ்ணா- ஒளிந்து கொள் அல்லது எழுந்து நில்
தீபச்செல்வன்- பயங்கரவாதிகளும் பதுங்குகுழிகளும்
நச்சீயாதீவு பர்வீன-; நான் நீ அவன் நிஜம்
கலைச்செல்வி- ஏனிந்த வம்பு
எளியோன்- மனிதத்தை விடுத்து..
எல்.வஸீம்.அக்ரம்- நிறங்களைக் காழ்பவன்
ஜி.இராஜகுலேந்திரா- ஆய்ந்து சொல்வீர்
இராகலைமோகன்- சுகம் விசாரிப்போம்
தி.காயத்திரி- கவலையின் முடிவிலி
இதயராசன்- முரண்பாடு

மொழிபெயர்ப்புக்கவிதை
----------------------------------------------------------
மஹ்முட்டர்வீஷ் -மண்ணின் கவிதை (தமிழில் மணி)
ஸீகன்த பிராச்சார்ய லால் ஸலாம்-செவ்வணக்கம் (தமிழில் சிவானந்தம்)

சிறுகதைகள்
--------------------------------------------------
ஸ்ரீ- எப்போதோ நடந்த போர் பற்றி எங்கேயோ ஒரு உரையாடல்
செவ்வந்தி- ஒரு ஓப்பதல் வாக்கு மூலம்
சோ.ஆதர்சனன்- சோமு பொடி
ச.முருகானந்தன்- தாய்


தொடர்நடைச்சித்திரம்
-------------------------------------------------------------------------
மாவை.வரோதயன்- வலிகாமம் மண்ணின் மைந்தர்கள் குழந்தை குமாரசாமி


விந்தை மனிதர்
---------------------------------
புவன ஈசுவரன்- குருநாதர் குஷ்வந்த்சிங்
ஆதவா.சு.சிந்தாமணி- அட்சய பாத்திரம் எங்கே?

சிங்கள மொழி பெயர்ப்புக்கதைகள்
-------------------------------------------------------------------
எரிக் இளையப்பாராச்சி- ஆசிரியர் ஒருவரின் காதல் (தமிழில் சி.சிவசேகரம்)

பின் வரலாற்றியல் தொடர்கதை
----------------------------------------------------------
ஜெகதலப்பிரதாபன்- ஆங்கிலேயனின் பரிசு 8 நாடு திரும்பற் படலம்

கட்டுரை
------------------------------
க.கைலாசபதி- ஏனிந்த தமிழுணர்ச்சி
சி.சிவசேகரம்- பாட்டும் பயனும் ( பாட்டும் செய்யுளும்)

விமர்சனம்
--------------------------------------
செ.சக்திதரன்- இப்சனின் 'தலைமைக் கட்டடக்காரன்'

முன் அட்டை ஓவியம் நசியும் வெளியை விடுவிக்கும் விதமாய் அதிகாரங்களைச் சாடுகிறது. மொழிபெயர்ப்புக் கவிதைகள் பல்வேறு செய்திகளை தருகின்றன. கூடுதலாகன தமிழ்க் கவிதைகள் அதிகாரங்களை சாடுகின்றன. புத்தக வடிவமைப்பில் இன்னும் செம்மையை ஏற்படுத்தலாம். எழுத்தருக்களின் அளவுகள் எழுத்துருக்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தாள்கள் முகப்பு மற்றும் பின் பக்கம் என்பன நேர்த்தியுடன் இருக்கின்றன. எளிமையான வாசிப்புத் தளத்தில் பயணிக்கும் தன்மையுடன் தாயகம் வருகிறது. அதன்படி தொடர்ந்து தாயகம் இதழின் சீரான வருகையும் வலிமையான குரலும் தனித்து தெரிகிறது
----------------------------------------------------

No comments: