Saturday, March 22, 2008

யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று கலை இலக்கிய சமுக இதழ்கள்

------------------------------------தீபச்செல்வன்
முற்றுப்பெறாத கட்டுரை....
#தாயகம்
#கலைமுகம்
#ஜீவநதி

யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று கலை இலக்கிய சமமூக இதழ்கள் வெளிவருவது மிகவும் வியப்புக்கும் மகிழ்வுக்குமான செய்தியாகும். தாயகம் கலைமுகம் ஜீவநதி என மூன்று இதழ்கள் வருகின்றன.

கலைமுகம்-முன்மாதிரியான இதழ்


கலைமுகம் இதழை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.ஒரு நவீன கலை இலக்கிய சமூக இதழ் என்ற சஞ்சிகைக்கான முன்மாதிரியான தன்மையுடன் காணமுடிகிறது. படைப்புக்களை தெரிவு செய்து இதழை அமைத்திருப்பதில் மிகவும் நேர்த்தியிருக்கிறது. திருமறைக் கலா மன்றத்தினரால் வெளியிடப்படுகின்ற 'கலை இலக்கிய சமுக' இதழ் என்ற தன்மையை தெளிவாக காணமுடிகிறது.
"இணையம் கதையாடல்களுக்கான புதியவெளி" என்ற கட்டுரையை கரன் எழுதியிருக்கிறார். இணையத்தளம் மற்றும் வலைப்பதிவுகளிள் ஊடாக முக்கியம் பெறுகிற கலை இலக்கிய சமுக அரசியல் வெளி பற்றிய கட்டுரையாக அது காணப்படுகிறது.

அந்தக்கட்டுரையோடு, தார்மிகி-திருமறைக்கலா மன்றம் நடத்திய தமிழ் விழா, அம்மன்கிளி முருகதாஸ்-பாரம்பரிய அறிவியலில் பழமொழிகள்-விவசாயம் தொடர்பான தமிழ்ப்பழமொழிகள், சண்முகம் சிவலிங்கம்-எஸ். புஷ்பாநந்தனின் இரண்டு கார்த்திகைப்பறவைகள்-கவிதைத் தொகுதியை புதிய புதிய விமர்சன ஆய்வுக்குட்படுத்தல், மதுரா-திருமறைக்கலா மன்றம்-கலைத்தூது கலையம் திறப்புவிழா -15.08.2007சனன்,- இலக்கியத்திற்கான நோபல் பரீசு-2007-நோபலின் அரசியலில் கவனம் பெறும் மற்றோரு உலகம்-டொறிஸ் லெஸ்ஸிங்,சைத்திரிகன்-லா.சா.ராமாமிருதம்-இசையின் உன்மையை உணர்தல் -அஞ்சலி, இங்கர் பெர்க்மன்- கைவிடப்பட்ட ஆன்மாக்களுக்க அருகில்- அஞ்சலி, வேல்.தஞ்சன்-புலமைப்பரிசில் பரீட்சை சமுகத்திற்கு அசாதாரண தன்மையாகின்றதா?-ஒரு நோக்கு, மகிழன்- இராமநாதன் நுண்கலைக்கழக மாணவர்களின் வர்ண மொழி - கண்காட்சி ,An Award to aflying artiste-Alfi முதலிய கட்டுரைகள் இருக்கின்றன.

கவிதைகளை அனார்- அனார் கவிதைகள்-குரல் என்றொரு நதி அல்லது திராட்சை ரசம், நான் பெண், அறைக்கு வெளியே அலைகிற உறக்கம்,உக்கிரம் முதலியகவிதைகள்., ம.பா.மகாலிங்கசிவம்-போர் என்பது கவிதை, செ.திருநாவுக்கரசு-அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் கவிதை, ம.பா.மகாலிங்க சிவம்- சாவே சமன் செய்யும் கோல்,தழுவல் கவிதை, சித்தாந்தன்-சித்தாந்தன் கவிதைகள- மெய் உறங்கும் நாட்களின் கோடை, கை மறதியாய் எடுத்து வந்த மூக்குக் கண்ணாடி, காற்றில் அலைகிற மரணம், குறி சொல்வேரின் கணிப்பில் தவறிய வாய்ப்பாட்டு சித்திரம், நீள் துயரின் அகாலப்பொறி முதலிய கவிதைகள்., துவாரகன்-கண்களைப்பற்றி எழுதுதல் கவிதை , ராசு-சிதைந்த பகலிலொரு நாள் கவிதை,பஹீமாஜஹான் கவிதைகள்- காட்டில் பெய்த மழை, ஊற்றக்களை வரவழைப்பவள் கவிதைகள், த.ஜெயசீலன்-வரண்டுபோன வாழ்க்கை, இரண்டு கவிதைகள்-த.அஜந்தகுமார்-பேசியபடிஇருத்தல், ஞாபகங்களின் அச்சக்கோடுகள் முதலிய கவிதைகளும் கவிதைப் பகுதியில் வெளியாகியுள்ளன. இதில் அனனார், சித்தாந்தன், துவாரகன், அஜந்தகுமார், பஹீமாஜஹான் முதலியோரின் கவிதைகள் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் முக்கியம் பெறுகின்றன.

சிறுகதைகள்-குப்பிழான்.ஜ.சண்முகம்-கண்டறிதல் -என்ற ஒருகதை வந்திருக்கிறது. பத்தி எழுத்துக்கள்-விபரீதன்-பிள்ளை நேயம் என்ற கற்பிதமும் தண்டனைகளாகும் அவமதிப்புகளும்-நடைவழிக்குறிப்பகள்,ஆ.சுரேந்திரன்-பரிமாற்றம் காணப்படுகிறது.

நேர்காணல்-குந்தவை மற்றும் சடாச்சரதேவியை இராகவன் நேர்கண்டிருக்கிறார்.மிகச் சிறந்த பேசவைத்தலுக்கான நுட்பங்களுடன் அந்த நேர்காணல் காணப்படுகிறது.

நெடுவல்-ரதீதரனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரு திரைப்படங்கள் ஒரு நோக்கு-குறும்படம்-கால்,வெட்டை-அறிமுகம்,முதலியவைகளோடு மேலும் பல விடயங்கள் வெளியாகி உள்ளளது.

இதழை வடிவமைத்திருப்பதில் மிக நேர்த்தி காணப்படுகிறது. அட்டை, பக்கவடிவமைப்புக்கள், எழுத்தருக்களை பயன்படுத்திய விதம் என்பன சீரான தன்மையினை கொண்டிருக்கிறது. மிக சிறந்த இதழாக கலைமுகம் வந்திருக்கிறது. அ.ஜீட்ஸன்-அட்டைப்பட கணனி வடிவமைப்பு, கி.செல்மர்எமில்-இதழ்வடிவமைப்பு, பிரதம ஆசிரியர் நீ.மரிய சேவிய அடிகளார்.

இந்த கலைமுகம் ஜீலை டிசம்பர் 2007 காலாண்டு இதழாக 'சமுக கலை இலக்கிய இதழாக வந்திருக்கிறது.
விலை-80ரூபா

தொடர்புகளுக்கு

திருமறைக்கலா மன்றம்,
238 பிரதானவீதி,
யாழ்ப்பாணம்,
இலங்கை.
தொலைபேசி,தொலைநகல்:0212222393
மின்னஞ்சல்: @sltnet.lk


ஜீவநதி-இளையவர்களின் முன்முயற்சி

சின்னராஜா விமலன்,கலாமணி பரணீதரன். முதலிய இளையவர்கள் நடத்த ஜீவநதி கலை இலக்கிய இருதிங்கள் ஏடு வெளிவருகிறது. இதுவரை நான்கு இதழ்கள் வந்திருக்கிறது. தாயகம் இதழ் கொழும்பில் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. கலைமுகம் இதழும் ஜீவநதி இதழும் யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டு வெளி வருகின்றன.

ஜீவநதி-பங்குனி சித்திரை 2008 இதழ் 'பெண்கள் சிறப்பு' இதழாக வந்திருக்கிறது. தனித்துவமான இதழ் வடிவமைப்பு இல்லாது ஞானம் முதலிய இதழ்களைப்போன்ற வடிவமைப்பு மற்றும் எழுத்தருத்தன்மைகளுடன் இந்த இதழ் வருகிறது. இது தனக்கான தனித்தவமான உருவத்தோடு வருவதற்கான முயற்சிகளை எடுக்கப்படவேண்டும். இருந்தாலும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகிற ஒரு இளைய இதழ் என்ற வகையிலும் தற்போது வெளிவருவதிலும் ஒரு முக்கிய தன்மையினை கொண்டிருக்கிறது. இந்த இதழ் "தமிழ் சூழலும் பெண்ணியமும்" என்றஆசிரியர் தலைப்போடு காணப்படுகிறது.

கவிதைகளை: ச.நிரஞ்சனி-இனியாவது, சரங்கா தயாநந்தன்(லண்டன்)-எனது கனவில் சிரித்தவர்கள், தாட்சாயணி-வார்த்தைகள் சூழ்ந்த வாழ்க்கை,டி.எச்.லவ்ரின்(91885-1930) இளம் மனைவி-கெக்கிறாவ ஸீலைஷா -மொழிபெயர்ப்புக்கவிதை, சுகிர்தராணி-பெரும்பாம்பு, கி-பிறைநிலா-சோகமும் சுகமாய் மாறும் -அறிமுகம், மைத்திரேயி-பாசம் முதலிய கவிதைகளும் காணப்படுகிறகின்றன.

கட்டுரைகள்- மனோன்மணி சண்முகதாஸ்-ஈழத்துப் பெண்படைப்பாளிகள்-சில குறிப்புகள், அம்மன் கிளி முருகதாஸ்-பெண்களின் பாடல் ஆக்கதிறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள், க.தங்கேஸ்வரி-கிராமியப்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், றஞ்சி(சுவிஸ்)-பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சினைகளும் தமிழ் பெண்களும், செல்வஅம்பிகை நடராசா-செம்மொழித்தமிழில் பெண்களின் புலமைத்தவம்-ஒளவையார்,ஜெயலஷ்மி இராசநாயகம்-பெண்களும் தலைத்துவப்பண்பும், றஞ்சி(சுவிஸ்)-சர்வதேசப்பெண்கள் தினம் மார்ச்08,சந்திரகாந்தா முருகானந்தன்-பால்நிலை பாரபட்சம் ஒழியாதவரை பெண்ணிய இலக்குள் எட்ட முடியாது, சௌந்தரி (அவுஸ்ரேலியா)கலாச்சார மாற்றம் முதலிய கட்டுரைகள் இருக்கிறன்றன.

சிறுகதைகளை: கார்த்திகாயினி சுபேஸ்-உதயம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம்-சீதனம் கொடுத்தால்..,கெக்கிறாவ ஸகானா-உண்மை-பெண்மை,ஆழியாள்(அவுஸ்ரேலியா)-ஒரு குட்டி இளவாசியுடனான வானவில் நாட்கள் முதலியோர் எழுதியிருக்கிறார்கள்.

இவைகளோடு கருத்துரைகள்,கலைஇலக்கிய நிகழ்வுகள்,பேசும் இதயங்கள், முதலிய பகுதிகளும் காணப்படுகின்றன. இதழ் வடிவமைப்படன் படைப்புக்களை தெரிவு தெய்வதில் கூடிய அக்கறை தன்மையினை எடுக்க வேண்டியதின் தன்மையினை சுட்டிக் காட்டவேண்டும்.தெணியான், குப்பிழான்.ஜ.சண்முகம்,கி.நடராஜாமுதலியோர் இந்த இதழின் ஆலோசகர்களாயிருக்கிறார்கள். இளையவர்களினால் முன்னெடுக்கப்படுகிற இந்த எழுத்து உழைப்பு முயற்சியினை ஊக்கப்படுத்தி நாம் பங்களிக்க முன்வரவேண்டிய தேவையும் உள்ளது.

விலை-50ரூபா

தொடர்புகளுக்கு
ஆசிரியர்இ
கலைஇகம்இ
சாமணந்தரை ஆலடிப்பிள்ளையார் வீதிஇ
அல்வாய்.


தொலைபேசி: 0775991949. 0776991015
தொலைநகல்: 0212263206
மின்னஞ்சல்:

தாயகம்-போரும் பெரும் துயரும்

தேசிய கலை இலக்கிய பேரவையின் வெளியீடான தாயகம் 68(ஜனவரி-மார்ச்)கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் யாழ் இதழாக வெளி வருகிறது. நாட்டின் பேர் நெருக்கடிகளின் மத்தியில் தாயகம் இதழை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த இதழது உழைப்பினால் அது ஒரு சீரான வருகையுடைய இதழாக கவனம் பெறுகிறது.
இந்த இதழின் ஆசிரியர் தலைப்பு"போரும் பெருந்துயரும்"என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது। "....சமாதானத்திற்கான மேசை விரிப்புகள் விரித்த உலக நாடுகள் போருக்கான ஆயுதங்களை வழங்க முன் வந்துள்ளன. தீர்வு முயற்சிகளை தூரப்போட்டு விட்டு போர்ப்பிரகடனங்களுடன் போர் தொடங்குகிறது...."என்று ஆசிரியர் தலையங்கம் தொடர்ந்து செல்லுகிறது."ஈழத்தமிழரை விட்டு இனிமலேசியத்தமிழர் பற்றிப்பேசலாம்" என்ற தலைப்புடன் மலேசியத்தமிழரின் பிரச்சினை பற்றி தொடர்ந்து எழுதப்பட்டிருக்கிறது. சமகால பிரச்சினைகள் பற்றி எந்தவித பிரக்ஞையும் அற்று பழைய மரபுகளுடன் வருகிற ஒருசில இதழ்களின் மத்தியில் தாயகம் இதழின் ஆசிரியர் தலைப்பானது தொடர்ந்து பிரச்சினைகள் பற்றி துணிந்து பேசுவதாகவும் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
முன்பக்கத்தில் காணப்படும் ஓவியமும் போரின் துயரத்தை வெளிப்படுத்துகிறது. உற்று அவதானிக்கையில் பல்வேறு வலிகளை புரிந்துகொள்ளமளவில் பரந்து விரிகிறது அந்த ஓவியம். இதழின் பின்பக்க ஓவியமும்கூட சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. இதழின் உள்பக்க வடிவமைபர்புக்களும் கையாளப்பட்டுள்ள எழுத்துக்களும்கூட குறிப்பிடத்தக்க அளவு ஒழுங்கை கொண்டிருக்கிறது.

கவிதைகள்:த.ஜெயசீலன்-வழமையான நாட்கள்,தி.திருக்கமரன்- சுதந்திரம் தருகிற சோகம், அழ.பகீரதன்-தகுமோ,சிவசேகரம்-சிலந்தி பற்றிய ஒரு சிந்தனை, பேரறிஞ்சன்-தீ வானத்தின் தின்னை, குறிஞ்சி நாடன்- வானம் பொறுக்குமோ, எஸ்.இ.பி.பாலமுருகன்-கனவுகள் தொலைதூரம்,கவிஞர் துரையப்பா-கண்ணதிலே ஈரமதாய்,சி.ஜெயசங்கர்-பயங்கரவாதம், நிலாகீற்றன்-மீட்கப்படட் மேதினியிலே,தி.கலைச்செல்வி- பாலைவனத்தின் சாயலா?,சை.கிங்ஸ்லிகோமஸ்-நெடுங்கவிதை,முதலிய நமது நாட்டுக்கவிதைகளும் இடம்பெற்றிருக்கிறது.
சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளை தாயம் இனம் கண்டு தமிழில் வாசிப்புக்கு தருகிறது கனான் அஷ்ரவி -ஏறத்தாள நான்கு வயதான குழந்தையின் நாட்குறிப்பு, எமஸ்ரெல்டா டவிலா-மலைகளில் லால் சிங்டில்-தாய்நாடு,)இ{இன்கிலிஷ்}அரசநைட சரமலளநசவேர்கள்(ஆபிரிக்கஈ அமெரிக்க கவிதை)-உhயசடழவவந றயவளழn ளாநசஅயn,{இன்கிலிஷ்}அகுமட்ஷம்லுர்- இந்த மூட்டுச் சந்தியில் முதலிய கவிதைகளை சிவசேகரம்,சோ.பா,குழந்தை.மா.சண்முகலிங்கம்,மணி முதலியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
உதாரம்......
கட்டுரைகளளை ஏகலைவா-எங்கோ நடந்ததும் இங்கே நடப்பதும்,சிவசேகரம்-படைப்பிலக்கியமும் பல்கலைக்கழகமும்,ஜெ.சற்குருநாதன்-மலையக சமூக அசைவியக்கமும் பண்பாட்டு நகர்வும் ஆகியவை எழுதப்பட்டள்ளது.அர்ஜென்ற்றீனாவில் அன்றும் அமரிக்காவில் இன்றும் -புஷ்கற்கவேண்டிய பாடங்களும் நாம் கற்கவேண்டிய பாடங்களும் என்ற கட்டுரை பயங்கரவாதத்திற்கு எதிரான போரை என }000000000000000{பற்றி குறிப்பிடுகிறது. சிவசேகரத்தின் கட்டுரை வாசிப்பின் போதாமை மற்றும் சிந்தனை தேக்கம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஜெ.சற்குருநாதனின் கட்டுரை ஈழமலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி குறிப்பிடுகிறது.
சிறுகதைகளை திக்குவல்லைகமால்-உழைப்பு,அயிராமி-எல்லை தாண்டல்,ந.பீ.அருளாநந்தம்-உலகத்தின் முதல் எதிரி,வனஜா நடராஜா- நிரபாதி,சிறீ-பட்டுத்தெளிந்தது. முதலியவைகள் வந்திருக்கிறது.

இவைகளோடு மாவை வரோதயனின் -பரந்தன் பாலசிங்கம்-நடைச்சித்திரமும்,சு.க.நடேசமூர்த்தி-ஊரும் சீரும்-உன்மைக்கதையும்,மணி தமிழில் மொழி பெயர்த்த தெய்வ சித்திரம் மொழி பெயர்ப்பு சிறுகதையம்,புவனஈசுவரன் சுந்தர காண்டம்,ஆதவா அ.சிந்தாமணி குறளி விளையாட்டு -விந்தை மனிதர் வடிவ எழுத்தும் ,தாயகம் இதழ் பற்றி திருக்கமரன் சுபாஷினி சந்திரகுமார், முதலியோர் எழுதிய விமரிசனங்களும் இவைகளுடன்நிகழ்வு,நீத்தார் நினைவு,கண்காட்சி முதலிய பகுதிகளும் காணப்படுகின்றன.இதழை வெளியிடுவதிலும் வடிவமைப்பதிலம் நெருக்கடிகளும் குறைபாடுகளும் காணப்படும் சூழலில் தாயகம் ஈடு கொடுக்கம் முகத்தோடு தொடர்ந்து வருகிறது.

தொடர்புகளுக்கு:
க.தணிகாசலம்,
ஆடியபாதம் வீதி,
கொக்குவில்.

தொலைபேசி:0212223629,0112335844


மின்னஞ்சல்: thajakam@gmail.com,thayakam@yahoo.com

இணையம்: .thajakam.com
----------------------------------------------------------------

Wednesday, March 12, 2008

பசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை

------------------------------------------------------------
பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்

சிறுகதை விமர்சனம் -----------------------------------------___________________________
--------------------------தீபச்செல்வன்

பசியோடும் இருளோடும் வாழுகின்ற சனங்களின் கதையாய் "பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள் "என்ற சிறுகதைத் தொகுதி வந்திருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் எழுதிய இந்த சிறுகதைகள் மேலும் சொல்லியிருக்க வேண்டிய வெளிகளும் குரல்களும் இருக்கின்றன என்றே படுகிறது. இருந்தாலும் இன்றைய சூழலில் இக்கதைத்தொகுதி "ஒரு தனியன் இறுமாப்படைகிறான் "என்கிற மாதிரியான குரலோடு முக்கியம் பெறுகிறது.

பல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது। முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைகூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது. த.அஜந்தகுமார்,தீபச்செல்வன்,திருச்செநதூரன்,ச.நிரஞ்சனி,ந.வினோதரன்,மயூரரூபன் போன்ற ஒருசிலரையே காணமுடிகிறது. அப்படிப்பார்க்கையில் எழுத்துச்சூழலுக்கான தொடக்கமாக இந்த கதைத்தொகுதியை கருதமுடிகிறது. ஆபத்தையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி எழுகிற எழுத்துக்களாக இந்த எழுத்தக்களை பார்க்கலாம்.

இந்த தொகுதியில் இடம்பெறும் கதைகளை ச.நிரஞ்சினி,ப.உதயசாந்தினி,சி.கோகிலவாணி,த.அஜந்தகுமார்,ந.வினோதரன்,ந.மயூரரூபன்,க.சிவதாரணி,சி.சிவாகர்.ஜெ.கவிதா முதலியோர் எழுதியிருக்கிறார்கள்

"உதிர்வு" என்ற கதையை ச.நிரஞ்சனி எழுதியிருக்கிறார். இதுவரையில் அவர் எழுதிய கதைகளிலிருந்து இது சற்று வித்தியாசப்படுகிறது. நவீன பெண்ணிய கதைகளுக்காளன தன்மைகளை கதை கொண்டிருக்கிறது. விண்மீனை பெண்ணென்றும் முகிலை ஆண் என்றும் குறியீடுபடுத்தகிற கதையில் பெண்ணை உரசிவிட்டு தட்டிக்கழித்து சொற்களாலும் நடைமுறைகளாலும் நெருக்குகையில் எழும்பும் ஒரு பெண் எழுத்தாய் கதை அமைகிறது. நவீன பெண்எழுத்துக்கான மொழியையும் நடைமுறைப்பாங்கையும் ஓரளவு கொண்டிருக்கிறது. தற்காலத்தில் ஈழத்தில் எழுதத்தொடங்கிய புதிய செம்மையடைந்து வரும் எழுத்தாளராக நிரஞ்சனி காணப்படுகிறார்.
"ஒரு தனியன் இறுமாப்படைகிறான்" என்ற கதைக்கு கைலாசநாதன் வரைந்த ஓவியம்

தொகுதியில் இடம்பெறும் மற்றொரு முக்கிய கதையாய் "ஒரு தனியன் இறுமாப்படைகிறான்" என்ற கதையை குறிப்பிடலாம். கிராமத்திற்குரிய புழங்கு மொழியை கதை கதையாடுகிறது. கிராமத்திற்குரிய கதை பேசும் முறை இயல்பாக காணக் கூடியதாயிருக்கிறது. மேலால் கதையை வாசிக்கையில் ஒருகதை புலப்படுவதைக்காணலாம். விவசாயி ஒருவனின் விவசாய வாழ்வில் குறுக்கிடுகிற மிருகங்களின் நாசங்களையும் அவைமீதான போரிடலையும் கதைபேசுகிறது. இன்னொருவிதத்தில் நாசப்படுத்தப்படுகிற ஒரு இனத்திற்குரிய செழுமையான போரிடலாகவும் கதை தெரிகிறது. புரட்சிர சமுகத்திற்குரிய குரலிடும் குறியீடாய் கதைத்தொகுதியில் இந்த கதை முக்கியம் பெறுகிறது. அதற்கான மொழியும் கதைச்சூழலும் சொல்லப்படுமுறையும் வாய்த்திருக்கிறது.

அடுத்து "பரிகாஷைக்காரனின் சுற்றோட்டத்தில் குதிரைக்காரன்" என்ற கதையை குறிப்பிடமுடியும். நவீன சிறுகதைக்கான அல்லது ஒருமுறைக்கான முயற்சி என்கிறார் அருந்தாகரன். ஆனால் ரகுநாதன் அதை இருண்மைத் தன்மை கொண்ட கதை என்கிறார். நானும் இதை சற்று வித்தியாசமான ஒரு நவீன சிறுகதைக்கான முன் தன்மையுடைய தாகவே நினைத்தேன். காதல் பற்றிய சொற்களுடனான சுய சம்பாஷனையும் உணர்வுமாக கதை அமைகிறது. ஒரு சிறிய புள்ளிப்பொழுது விரிகிற சொற்களின் ஓட்டமாய் கதை நிகழ்கிறது. கதையாடுவதும் கவிதைத்தன்னமை தன்மையுடையதுமாக கதை நகர்கிறது. கதையின் மொழி இறுக்கமும் அழகியலும் கொண்டிருக்கிறது.
சாதாரண மகக்களுக்கு புரியாத தன்மை ஒருவேளை கதை இருண்மைத்தன்மை உடையது என்ற தன்மையின் கீழ் விடலாம். த.அஜந்தகுமாரின் இந்தக்கதை இத்தொகுதியிலிருந்து தனிமைப்பட்டு சிலரால் முக்கியப்படுத்தப்படுகிற தன்மையும் சிலரால் இருண்மை என்று ஒதுக்கப்படுத்துகிற தன்மையும் கொண்டிருக்கிறது. சிறிய துண்டை விரித்து கதையாடிவரும் இந்தக்கதை ஏனோ முழுமை பெறாத ஒரு குறையுணர்வை கதை வாசித்து முடிக்கையில் ஏற்படுத்திவிடுகிறது.

அடுத்து இக்கதைத் தொகுதியின் தலைப்பாய் பிரதி முன்படுத்தும் "பசியடங்கா இருளிலிருந்து" கதையை பார்ப்போம. பசியடங்கா இருளிலிருந்து என்ற கதை யாழ்பாணத்தில் நிலவுகிற பசியையும் இருளையும் பெரியளவில் கொண்டிருக்கும் என்ற எதிபார்ப்பு வெற்றிடமாயிருக்கிறது. ஆனால் கதை இருள் பற்றி பெரியளவில் சொல்லுகிறது. யாழ்ப்பாணத்தில் நிலவிய மின்சாரத்துண்டிப்புகளும். விளக்கு அணைப்புகளும் இருளை பெரும் கொடுரமாக பார்க்கும் தன்மையை உருவாக்கி இருக்கிறது.

இந்தக் கதை இருள்மீதான பயத்தையும் இருள் சூழ்கிற குரூரத்தையும் பற்றி எழுதப்பட்டிருக்pறது. இருள் மூடிய பொழுதுகளை கதை விரித்து சொல்லுகிறது. பசி மிக மெல்லியதாகவே கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. விபரிக்கப்பட்ட காட்சிகளின் பின்னால் சொல்லப்படாத கதைகள் ஒளிந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கதை நவீன சிறுகதைக்கான தன்மையை இலேசாக கொண்டிருக்கிறது. கதையாடுகிற மொழியில் இத்தன்மையை காணலாம். இந்தக்கதையை ரகுநாதன் இருண்மைத்தன்மை உடையதாய் குறிப்பிடுகிறார். கதையில் ஒரு இருண்மைத் தன்மை மறைந்திருப்பதை காண முடிகிறது. கதை முக்கியப்படுத்தப்படுகிற தொகுதியாக இருக்கிற பொழுதும் திருப்தி அளிக்காகாத தன்மையினை கொண்டிருக்கிறது.

"இழப்புகள்" என்ற கதை ஏ-9 பாதை மூடப்பட்ட முடப்பட்ட பின்னர் நிலவிய பசியின் கொடுரம் பற்றியதாக இருக்கிறது. மிக எளிமையான மொழியில் கதைஅமைகிறது. பாதைபூட்டப்பட்ட பின்னர் பசியின் துயரத்தால் ஒரு குடும்பம் அனுபவிக்கிற துன்பங்களை சொல்லுகிறது. பிள்ளையை அநாதரவாக சேர்ஜ்சில் விட்டுச்செல்லுகிற அளவில் உளவியல் ரீதியாக பாதிப்படைகிற தந்தையை பற்றி கதை இடம் பெறுகிறது. உளவியல் ரீதியாக பாதிப்படைந்திருக்கும் சமுகத்திற்கு தேவையான உளவியல் ஆற்றுதல் பற்றிய தன்மையை முன்வைக்கிறது "பசியடங்கா இருளிலிருந்து" என்ற கதைத்தொகுதியின் தலைப்பை பிரதிபலிக்கும் கதையாக இதைப் பார்க்கலாம். இந்த தொகுதியின் முக்கியமானதொரு கதையாக இதை குறிப்பிடலாம்.

இவைகளோடு ப.உதயசாந்தினியின் "பதம்" என்ற பெண்ணியம் பற்றியதும் சி.கோகிலவாணியின் "விரட்டப்பட்ட கனவுகள்" க.சிவதாரணியின் "கோடிட்ட இடம்" ஜெ.கவிதாவின் "தாய்மனசு" என்ற சுனாமி இழப்புதொடர்பான கதை முதலிய கதை முயற்சிகளும் தொகுதியில் இடம்பெறுகின்றன. இவர்களின் கதை முயற்சிகள் மொழி.கதையின் பரப்பு. கதையாடும் முறை முதலியவற்றில் குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. இவைகள் நம்பிக்கைகளை ஏற்படுத்துகிறமாதிரியான தன்மையை கண்டடைவதற்கான இடங்களை அவசியப்படுத்துகிறது.

இந்த தொகுதியில்
ச.நிரஞ்சனியின் -"உதிர்வு"
த.அஜந்தக்குமாரின்-"பரிபாஷையின் சுற்றோட்டத்தில் குதிரைக்காரன்"
ந.வினோதரனின்-"ஒரு தனியன் இறுமாப்படைகிறான்"
சிவாகரின்-"இழப்புகள்"
மயூரரூபனின்-"பசியடங்கா இருளிலிருந்து"
முதலிய கதைகள் முக்கியம் பெறுகின்றன.

புத்தக்தில் இடம்பெறுகின்ற ஓவியங்கள் பற்றி முக்கியமாக குறிப்பிடவேண்டும். முன்னட்டை ஓவியம் மிக எளிமையானதாயிருக்கிறது. பசியடங்கா இருளிலிருந்து என்ற ஏக்கத்தையும் ஒடுங்கிப்போயிருத்தலையும் முகத்தில் வெறி எழுகிறதையும் இன்னும் பலவற்றை பிரதிபலிக்கிறது. கதைகளுக்கான உள் ஓவியங்களும்கூட சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. நவீன ஓவியத்தன்மையுடனும் குறியீட்டப்பாஷையுடனும் பல உணர்வுகளை குவிக்கிற தன்மையும் கொண்டிருக்கிறது. ஓவியங்களை கோ.கைலாசநாதன் வரைந்திருக்கிறார்.

புத்தகத்தின் வெளி அட்டையின் எளிமை வரவேற்கத்தக்கது. ஆனால் புத்தகத்தை உள்ளே வடிவமைப்புச்செய்ததில் பல குறைபாடுகள் இருக்கின்றன. பக்கவடிவுகள்.எழுத்துருக்களை பாவித்தவிதம். எழுத்துருவின் அளவுகள். பந்தியமைப்பு. என்பவற்றில் சீரின்மையும் போதியளவிலான ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன. ஓவியங்களால் பெரியளவு இந்த குறைபாடு வாசிப்பை பாதிக்காதிருக்கும் போலுள்ளது.

ஏற்கனவே இரண்டாயிரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் எழுதிய "மண்ணின் மலர்கள்" என்ற கதைத்தொகுதி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தட்சாயினி, ராகவன்,உடுவில் அரவிந்தன்,சிவாணி,பிரியா போன்றோர் எழுதியிருந்தனர். இதில் தட்சாயினி, ராகவன் முதலியோர் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதிவருகின்றமை முக்கிய விடயமாகும்.

கதைகளை செ.யோகநாதன், சோ.ப, குப்பிளான் ஜ. சண்முகம் முதலியோர் தெரிந்திருக்கிறார்கள். கதைகளை ந.வினோதரன் தொகுத்திருக்கிறார். இந்த கதைத்தொகுதி புதிய எழுத்துக்கான தொடக்கமாகும். இவர்கள் நல்ல கதைகளை எழுதுகிறவர்களாகவும் புதிய கதை எழுத்தப்பரப்புக்களை உண்டாக்கிறவர்களாகவும் செம்மையடைய வேண்டும். இன்னும் புதியவர்களும் எழுதத்தொடங்க வேண்டும்.
------------------------------------------------------------------