Monday, August 25, 2008

"தாயகம்" அதிகாரங்களைப் பேசுகிறது

--------------------------தீபச்செல்வன்
----------------------------------------------------------------------------------------------------------------------
தாயகம் கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் ஜீலை-செப்ரம்பர்2008 வெளிவந்திருக்கிறது. அதிகாரங்களிடமிருந்து சுயங்களைக் காக்கும் தன்மையும் அதிகாரத்தின் பல்வேறு கூர்மையான முகங்களையும் அதிலிருந்தான எழுச்சியையும் தாயகம் பேசுகிறது. தாயகம் இதழ் தொடர்ந்து தனது முகத்தை வலிமைப்படுத்தி புதிய வாழ்வு ஒன்றை உருவாக்க முனைகிறது. சமூகத்தில் அரசியல் பொருளாதார தன்மைகளை மிக எளிமையாக எடுத்து பேசுகிறது. உலக அரசியல் அதிகாரங்கள் எமது சுயங்களையும் உரிமைகளையும் விழுங்கும் தன்மையும் அது கல்வி பொருளாதாரம் சமயம் என்று தனது மேலாதிக்கம் கையாளும் மயங்களையும் துணிந்து பேசுகிறது.

அதன்படி 'இரும்புத்திரையும் மாயத்திரையும்' எனவும் 'உதவுங் கரங்களும் உதைக்கும் கால்களும்' எனவும் ஆசிரியர் உரைகள் எழுதப்பட்டுள்ளன.

கவிதைகள்
------------------------------------
சு.சுகனேசன்-அவர்கள் பார்வையில்
வே.மகேந்திரன்-மீள வருவோம்
ம.பா.மகாலிங்கசிவம்- எலிச் சுத்திகரிப்பு
கிருஷ்ணா- ஒளிந்து கொள் அல்லது எழுந்து நில்
தீபச்செல்வன்- பயங்கரவாதிகளும் பதுங்குகுழிகளும்
நச்சீயாதீவு பர்வீன-; நான் நீ அவன் நிஜம்
கலைச்செல்வி- ஏனிந்த வம்பு
எளியோன்- மனிதத்தை விடுத்து..
எல்.வஸீம்.அக்ரம்- நிறங்களைக் காழ்பவன்
ஜி.இராஜகுலேந்திரா- ஆய்ந்து சொல்வீர்
இராகலைமோகன்- சுகம் விசாரிப்போம்
தி.காயத்திரி- கவலையின் முடிவிலி
இதயராசன்- முரண்பாடு

மொழிபெயர்ப்புக்கவிதை
----------------------------------------------------------
மஹ்முட்டர்வீஷ் -மண்ணின் கவிதை (தமிழில் மணி)
ஸீகன்த பிராச்சார்ய லால் ஸலாம்-செவ்வணக்கம் (தமிழில் சிவானந்தம்)

சிறுகதைகள்
--------------------------------------------------
ஸ்ரீ- எப்போதோ நடந்த போர் பற்றி எங்கேயோ ஒரு உரையாடல்
செவ்வந்தி- ஒரு ஓப்பதல் வாக்கு மூலம்
சோ.ஆதர்சனன்- சோமு பொடி
ச.முருகானந்தன்- தாய்


தொடர்நடைச்சித்திரம்
-------------------------------------------------------------------------
மாவை.வரோதயன்- வலிகாமம் மண்ணின் மைந்தர்கள் குழந்தை குமாரசாமி


விந்தை மனிதர்
---------------------------------
புவன ஈசுவரன்- குருநாதர் குஷ்வந்த்சிங்
ஆதவா.சு.சிந்தாமணி- அட்சய பாத்திரம் எங்கே?

சிங்கள மொழி பெயர்ப்புக்கதைகள்
-------------------------------------------------------------------
எரிக் இளையப்பாராச்சி- ஆசிரியர் ஒருவரின் காதல் (தமிழில் சி.சிவசேகரம்)

பின் வரலாற்றியல் தொடர்கதை
----------------------------------------------------------
ஜெகதலப்பிரதாபன்- ஆங்கிலேயனின் பரிசு 8 நாடு திரும்பற் படலம்

கட்டுரை
------------------------------
க.கைலாசபதி- ஏனிந்த தமிழுணர்ச்சி
சி.சிவசேகரம்- பாட்டும் பயனும் ( பாட்டும் செய்யுளும்)

விமர்சனம்
--------------------------------------
செ.சக்திதரன்- இப்சனின் 'தலைமைக் கட்டடக்காரன்'

முன் அட்டை ஓவியம் நசியும் வெளியை விடுவிக்கும் விதமாய் அதிகாரங்களைச் சாடுகிறது. மொழிபெயர்ப்புக் கவிதைகள் பல்வேறு செய்திகளை தருகின்றன. கூடுதலாகன தமிழ்க் கவிதைகள் அதிகாரங்களை சாடுகின்றன. புத்தக வடிவமைப்பில் இன்னும் செம்மையை ஏற்படுத்தலாம். எழுத்தருக்களின் அளவுகள் எழுத்துருக்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தாள்கள் முகப்பு மற்றும் பின் பக்கம் என்பன நேர்த்தியுடன் இருக்கின்றன. எளிமையான வாசிப்புத் தளத்தில் பயணிக்கும் தன்மையுடன் தாயகம் வருகிறது. அதன்படி தொடர்ந்து தாயகம் இதழின் சீரான வருகையும் வலிமையான குரலும் தனித்து தெரிகிறது
----------------------------------------------------

“கலைமுகம்” அமைதியாக பதிகிறது

--------------------------தீபச்செல்வன்
----------------------------------------------------------------------------------------------------------------------
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “கலைமுகம்” ஜனவரி –ஜீன் 2008 இதழ் வெளி வந்திருக்கிறது. சமூகத்தினதும் கலை இலக்கியங்கினதும் மெல்லிய முகத்தோடு செம்மையடைந்த ஒரு கலை இலக்கிய இதழாக வந்திருக்கிறது. படைப்புகள் கூட மெல்லிய முகங்களையும் செம்மையையும் கொண்டிருக்கின்றன.

கட்டுரைகள்
-----------------------------
சு.குணேஸ்வரன் - புலம்பெயர் சஞ்சிகைகள்
ராசு – தேவதைகளின் மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்புகளும் தற்கொலையும்
கா.சிவரூபன் - பனையிடைவெளி(ஒளிப்படக் காட்சி)
சி.ரமேஷ் - உள்முக அபத்தமும் அதன் இயங்கு நிலையும்( 20ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ்க் கவிதைகள்)
செவ்வந்தி – கவிய சம்பிரதாயம் (கவிதையியற் பள்ளிகள்) ஆங்கில மூலம் நிர்மல.ஜெயின்
இ.ஜீவகாருண்யன் - ஈழத்து நவீன இலக்கிய விமர்சனம்:ஆழ் நோக்கிற்கான ஆரம்பக் குறிப்புக்கள்
குப்பிழான்.ஜ.சண்முகன் - பத்தி எழுத்தக்கள்
மகிழன் - பல்வேறு சிறப்பக்களும் கொண்டமைந்த திருமறைக்கலாமன்றத்தின் கூத்த விழா-2007(ஒரு பார்வை)
தபின் - சமகாலத்துடன் இணைந்து நின்ற தலமைக் கட்டடக்காரன் நாடகம்

தொடர்
--------------------------------
சௌ ஜன்யஷாகர்-சுவைத்தேன்-05 சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள்
யோ.யோண்சன் ராஜ்குமார்- திருமறைக் கலா மன்றத்தின்-கடல் கடந்த கலைப் பயணங்கள்-பயணம்3

கவிதைகள்
------------------------
அனார் - பருத்திக்காய்கள் வெடிக்கும் நாள்
சைத்திரிகன் -காதலர்களைப் போல இருத்தல்,காதலியைப்போல முத்தமிடல்
அ.அனுஷானி – நான் ஒரு புத்தகம்
தீபச்செல்வன் - மேசைக்கு கீழே புகைந்த சிகரட்,
நிலவு தேடிய குழந்தை,
அறையை விட்டுப் போன பல்லி,
பறவை மிருகமாகியது.
பெரிய ஜங்கரன் - இருண்மை, தூசு தட்டதல் ,சிதறும் தத்தவங்கள்
ஜோ.ஜெஸ்ரீன் -அவல நிறம்

சிறுகதைகள்
-------------------------------
குகபரன் - தாய்மைக்காக
நிர்மலன் - வழிகாட்டிகள்

பத்தி
-------------------------------
ஆ.சுரேந்தின் - பரிமாற்றம்


நேர்காணல்
-----------------------------------
சிற்பி-சிவவரவணபவன் சந்திப்பு:இயல்வாணன்

புத்தக அறிமுகம்
----------------------------------
நிலான்,கிருத்தியன் -ஒரு கடல் நீரூற்றி(பஹீமாஜஹான் கவிதைகள்)
இராகவன் -எல்லாப்பூக்களும் உதிர்ந்து விடும்(அலறி கவிதைகள்)
தி.செல்வமனோகரன- குறிப்பேட்டிலிருந்து..(அ.யேசுராசா இலக்கியக்கட்டுரைகள்)
பா.இரகுவரன்- உதிரிகளும்…(குப்பிழான் ஜ.சண்முகன் கதைகள்)
ம.ஜெயந்திரன்- பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்(யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் கதைகள்)

இவைகளுடன் நிகழ்வுகள்,பதிவுகள்,கடிதங்கள்,அஞ்சலிகள் முதலியனவும் இடம்பெறுகின்றன.

கலைமுகம் இதழை வடிவமைப்தில் காணப்படுகின்ற நுட்பங்கள்அதனை ஒரு செம்மையடைந்த இதழாக காண்பிக்கின்றன. அதிலும் இந்த இதழில் கூடுதல் நேர்த்தியும் ஒழுங்கும் காணப்படுகின்றது உள் எழுத்துருக்களின் அளவுகளும் எழுத்துருவும் தெளிவாக ஒழுங்குடன் இருக்கிறது. துலைப்புகளுக்கு ஒரு சில ஒறறுமைத்தன்மையுடைய எழுத்துருக்களை பாவித்திருக்கலாம். புத்தக வடிவமைப்பில் அலங்காரத்தனமான எழுத்துருக்கள் வெறுக்கப்படுகின்றன. அவை வாசிப்பில் அலுப்பையும் காலம் கடந்த தன்மைகளையும் ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் இது பற்றிய முன்மாதிரிகளுடன் கலைமுகம் வடிவமைக்கப்படுகிறது.

கலைமுகம் தொடர்ந்தும் உரிய காலத்தில் வெளிவருவதுடன் கூடுதல் செம்மையினை பெற்று சமூகத்தின் அரசியலின் ஊடாட்டங்களின் வலிய குரலோடு வெளிவரவேண்டும். எனினும் காலத்தின் முகம் அறிந்து அமைதியாய் சமூகத்தை பதிவு செய்கிறது கலைமுகம் இதழ்.
----------------------------------------------------------------