Tuesday, December 2, 2008

அம்மாக்கள் சுமக்கிற துயரங்கள்:மாதுமை கவிதை

-----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________

காலம் மற்றும் சனங்களின் நெருக்கடிகளை பிரிதிபலிக்கும் பல கடிதங்களை வாசிக்க முடிகிறது. எனது அம்மா எனக்கு எழுதுகிற கடிதங்களிலும்கூட நான் பெரிய துயரங்களை கண்டேன். மிகவும் கசங்கிய ஒரு கொப்பித்தாளின் ஒரு பக்கத்தில் முடிகிற அந்தக் கடிதத்தில் அம்மா எழுதாத துயரங்கள் பெருகுவதை என்னால் உணரமுடிகிறது. அதைப்போலவே என்னோடு படிக்கும் நண்பன் ஒருவனுக்கு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் இருந்து அவனது அம்மா அப்பா தங்கைகள் தம்பி எழுதிய கடிதங்கள் மிகவும் காலதாமதமாக கிடைக்கப் பெற்றிருந்தது. அவன் அழுதுகொண்டே இருந்தான். அதில் வலிகளாலான பெருவாழ்வை வாசித்து அழத்தான் முடிந்தது.

மாதுமைக்கு அவரது அம்மா எழுதிய கடிதமும் பெருவலி சுமந்து அவருக்கு வந்திருக்கிறது.
“உனது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை தினமும் வேண்டுகின்றேன்”
இந்த வரி சாதாரணமாக கடிதங்களில் இருந்தாலும் அதனைத் தொடர்ந்து வருகிற
“இன்று ஏனோ தெரியவில்லை மனம் ஒரே கவலையாக இருக்கிறது. உன்னைப்பார்க்க வேண்டும்போல் மனதில் ஒர் இனம்புரியாத ஆசை”
என்ற வரிகள் உண்மையில் ஒரு தாயின் மனதிற்குள்ளிருந்து எழும்புகின்ற குரல்களாக உள்ளன. அதன் கனதி முழுக்கடிதத்தையும் கவனப்படுத்துகின்றது.

போர் எல்லோரையும் துரத்திக்கொண்டிருக்கிறது. உயிரை காத்துக் கொள்ள எல்லோருமே எங்காவது போய்விட முயலுகிறோம். அதுதான் அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்பு கொள்கிற வெற்றியாக நிகழ்கிறது.
“நீ எங்கிருந்தாலும் நல்ல படியாக வாழவேண்டும் என்று விரும்புகிறேன்”
இங்கிருக்கிற அனேக அம்மாக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். பிள்ளைகளுடன் சேர்ந்திருப்பதைவிட அவர்கள் எங்காவது மிஞ்சியிருக்கட்டும் என்றே நெருக்கடிப்படுகிறார்கள். அந்த நெருக்கடியிலிருந்து நிமிடத்துக்கு நிமிடம் அவர்கள் வலிகளை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

போர் மற்றும் அதன் அதிகாரத்திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.
“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்”
இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வரமாட்டது. வர முடியாது. என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.

தமிழ்நதி இங்கு வரத்துடித்துக் கூறினார். சனங்கள் அனுபவிக்கிற போரை தானும் அனுபவிக்க துணிவதை நான் உணர்ந்தேன். நிவேதா எழுதிய கடிதத்தில்
“அங்கு வாழ்வுக்கான போராட்டம் என்றால் இங்கு இருப்புக்கான போராட்டம்.”
என்று எழுதியிருந்தார். றஞ்சனி ஜெபாலன் எல்லோருமே மண்ணை பிரிந்த ஏக்கத்தையும் இங்க உறவுகள் அனுபவிக்கிற பெருந்துயரை கண்டு கொதித்து துடிப்பதையும் கேட்டிருக்கிறேன். அப்படியான வலி மாதுமையிடமும் காணப்படுகிறது.

அம்மாவின் கடிதத்தை மையப்படுத்திய மாதுமையின் பதினொரு வரிகளான இந்தக் கவிதை மிகவும் இறுக்கமாகவும் இயல்பாகவும் விரிந்த கனதியுடனும் அமைகிறது. கடிதத்தை மேலே குறிப்பிட்டு விட்டு கீழெ அதன் தாக்கமாக அல்லது வாசிப்பின் பிறகான கவிதையாக மாதுமை கவிதை இடம் பெறுகிறது. இந்த சிறிய கவிதை பரந்த ஆய்வுக்குரிய உட்பரப்பை கொண்டிருக்கிறது.
“இலங்கை அம்மாவிற்கு
எதுவிதத்திலும் சளைக்காமல்
கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்
பாலஸ்தீன அம்மா
சிதைக்கப்பட்டிருந்தால் திபெத்திய அம்மா
சிதிலமடைந்திருந்தாள் சிம்பாபே அம்மா
நடை பிணமாயிருந்தாள் ஈராக்கிய அம்மா
நிர்வாணப்பட்டிருந்தார் டாபுர் அம்மா
கைவிடப்பட்டிருந்தாள் அமெரிக்கா அம்மா

அம்மாக்கள் மட்டும் ஒற்றமையாக இருந்தனர்
உலக துயரங்களை சுமக்க”
உலக அதிகாரங்கள் அம்மாக்களை வதைக்கிறது என்ற பொதுவான ஏக்கம் கவிதையில் இருக்கிறது. அம்மாக்கள் எல்லாவித்திலும் பாதிக்கபப்டுவதை மாதுமை கவிதை பேசுகிறது.

போர், அரசியல், பொருளாதாரம், கொலை, தந்திரம், ஆணாதிக்கம், பாலியல் வன்முறை எல்லாமே சேர்ந்து அம்மாக்களை வதைகிறது. அதிகாரங்களின் நகர்வுகளிலும் அதன் செயற்பாடுகளிலும் தொடர்புகளிலும் ஈடுபாடுகளிலும் வருகிற பலன் அல்லது அழிவுகளை அம்மாக்களே சுமக்க நேரிடுகிறது.

இந்த நெருக்கடிகளின் பொழுது அம்மாக்களிடம் கோடிக்கனக்கான அனுபவங்களும் கதைகளும் கண்ணீரும் உருவாகின்றன. இந்த அனுபவமும் வலியும்; எழுதி முடிக்க முயாதவை. எல்லேருடைய வினைகளையும் உலகம் எங்கிலும் அம்மாக்களே சுமப்பதாக மாதுமை கவிதை கூறுகிறது. குறிப்பிடப்படுகிற நாடுகளின் அம்மாக்கள் அந்தந்த நாடுகளின் மீது அதிகாரம் வைத்திருக்கிற குறிகளையும் அல்லது நலன்களையும் வெளிப்படுத்தகின்றன. அதன் பலன்களை அம்மாக்கள் சுமக்கும் விதத்தை எடுத்துப் பேசுகிறது.

மாதுமை எழுதிய இந்தக்கவிதை இன்றைய உலக வாழ்வுச் சூழலை பேசுகிறது. அதிகாரம் மற்றம் ஆக்கிரமிப்பு மற்றும் அழிவு என்பவற்றின் போக்கை உலகளவில் நின்று கோபப்படுகிற அவருடைய பார்வை மிகவும் பரந்ததும் முக்கியமானதுமானதாக படுகிறது.
-----------------------------------------------------------------------------
யுகமாயினி அக்டோபர் இதழில் இந்த மாதுமைகவிதை இடம்பெறுகிறது.

Friday, October 10, 2008

‘புரிதலின் அவலம்’ றஞ்சனி கவிதை வெளியில் அலையும் சொற்கள்

--------------------------தீபச்செல்வன்


--------------------------------------------------------------------------
றஞ்சனியின் கவிதை சிலவற்றிற்க்கு வார்ப்பு இணையதளத்தில் பின்னூட்டம் எழுதியிருந்தேன். முதல் வாசினடிப்படையில் மதிப்பிடப்பட்ட அந்தக்கருத்துக்களை நானே மீறுகிற வகையில் அவரின் புரிதலின் அவலம் என்ற கவிதை என்னை பாதிக்கிறது. பிழைத்துப்போன புரிதலிலிருந்து வெளியில் அலைகின்ற சொற்களை சில அடிகளில் இணைக்கின்ற பாங்கை றஞ்சனியிடம் காணமுடிகிறது. அத்தன்மை ஒருங்கினைந்து இந்தக் கவிதையில் துண்டாடப்பட்ட ஒரு இரவில் அல்லது ஒரு பகலில் கிடந்து உருள்கிற குருதியின் சொற்கள் கிளம்புகின்றன.

றஞ்சனியின் அடையாளத்தை 'புரிதலின் அவலம்' என்ற ஒரு கவிதையின் ஊடாக காணமுடிகிறது. அது நீண்ட வாழ்வின் ஒரு நாளை பிழைத்துப்போன நிமிடத்தின் ஒரு துளியை பேசுகிறது. மாறிமாறி மாறிவிடுகிற இணைவுக்குள்ளும் பிரிவுக்குள்ளும் அறுந்து வெளியில் வந்துவிடுகிற புழுவாக துடிப்பையும் காற்றையும் பிரதிபலிக்கிறது.

"முத்தங்களாகி கலியில் மயங்கி
இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி
கரைந்துபோகும் அடுத்த நிமிடமே
நீ ஆணாகி விடுகிறாய்."
இது வெளியின் சொற்களை காண்பிக்கிறது. கலவியில் குறையில்விட்டு எழுந்து செல்கையில் இருட்டில் படுக்கையில் கிடக்கிற தெரியாத முகத்தையும் கேடக்;காத சொற்களையும் எழுதுகிறது. குறையில் விட்டுச் செல்கிற அந்தப்படுக்கையிலிருந்து இருட்டிலிருந்து மூடுண்ட புல்பற்றையிலிருந்து எழுந்து செல்கிறதை எழுதுகிறது.

"நான் காணவேண்டிய நீ முழுமையாகக் காணாது
ஆணாக விஸ்வரூபம் எடுக்கிறாய்"
பிழைத்துப்போன நிமிடத்தை வெறுக்கிற உணர்வை எழுதியது இந்த அடிகள் கவிதையை வெளியில் இடுகிறது. குறையாய் கிடைக்கையில் ஆண் உருவம் வெளி எழும்புகிற அதன் அலத்தை எழுதுகிற போது விட்டெழும்புகிற வேகமும் வெறுப்பையும் சட்டென வெளியே சொல்லுகிறது.

"ஒரு நாள் மறந்துவிடலாம்
இரு நாள் மன்னித்து விடலாம்ஒவ்வொரு நாளும்
பைத்தியமாகிறது உறவு"
பகலின் இடைவெளியில் முகமிழந்து துடிக்கிற மொழியினையும் மறைந்துகிடக்கிற குறியின் முகத்தையும் சரிசெய்ய முடியாத கலவியையும் கேள்விக்குள்ளாக்கின்றன. பைத்தியமான அல்லது குழப்பமான பொழுதுகளை நிறைத்துவிடுகிற உறவாய் நாள் அமைந்துவிடுகிறதை வெளிப்படுத்துகிறது.

"நீ எழுதுகிறாய் பேசுகிறாய்
இதில் பெண்ணுரிமை வேறு
எதையுமே நீ புரிந்ததில்லை
எப்படி முடிகிறது உங்களால்"
வீட்டுக்குளிலிருந்து வெளியில் வந்து கேள்விகளாய் முகத்தில் அறைகின்றன இந்தச் சொற்கள். எதையுமே புரியாத நீ என்பதில் புரிந்துகொள்ளபடாது தள்ளிப்போன நிலையையும் உடைந்த முகத்தையும் கொண்டிருக்கிறது. எப்படி முடிகிறது என்பதில் தனி ஒரு கேள்வி பெரிதாய் விரிந்து எழுவதை காணமுடிகிறது.

"என்னால் முடியவில்லை விட்டுவிடு
எல்லாத்தையுமே"
கவிதையின் கடைசியில் இருக்கின்ற இந்த வரிகளுடன் இரவும் படுக்கையும் கலவியும் பகல்களும் முடிந்துவிடுகின்றன. அதன் கடைசி அடியில் இருந்து வெளி புறப்படுகின்றது அல்லது உருவாகிறது. சொற்கள் அலையத் தொடங்குகின்றன. காற்றை அறிகிற ஒளியை அறிகிற கடைசி அடிக்குப்பிறகான வெளியில் புரிந்து கொள்ள முடியாத எப்போதுமே புரிந்து கொள்ள முடியாதுபோன உணர்வு தொடர்ந்து துடித்துக்கnhண்டிருக்கிறது.


கடைசி அடியின் பிறகான வெளியில் துடிக்கின்ற வெளியில் புரிவதற்கன அவலமும் வெளியும் இருக்கிறது. இந்தப்போதாமையினையும் இடைவெளியினையும் புரிதலின் அவலத்தில் றஞ்சனி நிரப்பியுள்ளார். இந்தக்குறைநிலையினை வெளியில் வந்துபேசுவது றஞ்சனியின் மொழியின் சிறப்பாகவும் அடையாளமாகவும் படுகிறது. புரிதலின் குழப்பம் பற்றி இவர் நிறையக் கவிதைகள் எழுதியபோதும் எப்பொழுதும் கொதித்துக்கொண்டிருக்கும் நிமிடத்துளியையும் குருதியையும் இரவையும் இந்தக் கவிதை சிறப்பாக போர்வையிலிருந்து வெளியிலெடுத்துக் காட்டுகிறது. காத்திருத்தலை உடைத்து வெளியில் அலையும் எண்ணற்ற சொற்களும் இருக்கின்றன. உண்மையில் நினைவுக்கு வரும்பொழுதெல்hலாம் இந்தக் கவிதை முகத்தில் அறைந்து கொண்டிருக்கிறது.
-----------------------------------------------------------------------
('பெயல் மணக்கும் பொழுதுகள்' என்ற ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுதியில் றஞ்சனியின் புரிதலின் அவலம் கவிதை இடம்பெறுகிறது)

Monday, August 25, 2008

"தாயகம்" அதிகாரங்களைப் பேசுகிறது

--------------------------தீபச்செல்வன்
----------------------------------------------------------------------------------------------------------------------
தாயகம் கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் ஜீலை-செப்ரம்பர்2008 வெளிவந்திருக்கிறது. அதிகாரங்களிடமிருந்து சுயங்களைக் காக்கும் தன்மையும் அதிகாரத்தின் பல்வேறு கூர்மையான முகங்களையும் அதிலிருந்தான எழுச்சியையும் தாயகம் பேசுகிறது. தாயகம் இதழ் தொடர்ந்து தனது முகத்தை வலிமைப்படுத்தி புதிய வாழ்வு ஒன்றை உருவாக்க முனைகிறது. சமூகத்தில் அரசியல் பொருளாதார தன்மைகளை மிக எளிமையாக எடுத்து பேசுகிறது. உலக அரசியல் அதிகாரங்கள் எமது சுயங்களையும் உரிமைகளையும் விழுங்கும் தன்மையும் அது கல்வி பொருளாதாரம் சமயம் என்று தனது மேலாதிக்கம் கையாளும் மயங்களையும் துணிந்து பேசுகிறது.

அதன்படி 'இரும்புத்திரையும் மாயத்திரையும்' எனவும் 'உதவுங் கரங்களும் உதைக்கும் கால்களும்' எனவும் ஆசிரியர் உரைகள் எழுதப்பட்டுள்ளன.

கவிதைகள்
------------------------------------
சு.சுகனேசன்-அவர்கள் பார்வையில்
வே.மகேந்திரன்-மீள வருவோம்
ம.பா.மகாலிங்கசிவம்- எலிச் சுத்திகரிப்பு
கிருஷ்ணா- ஒளிந்து கொள் அல்லது எழுந்து நில்
தீபச்செல்வன்- பயங்கரவாதிகளும் பதுங்குகுழிகளும்
நச்சீயாதீவு பர்வீன-; நான் நீ அவன் நிஜம்
கலைச்செல்வி- ஏனிந்த வம்பு
எளியோன்- மனிதத்தை விடுத்து..
எல்.வஸீம்.அக்ரம்- நிறங்களைக் காழ்பவன்
ஜி.இராஜகுலேந்திரா- ஆய்ந்து சொல்வீர்
இராகலைமோகன்- சுகம் விசாரிப்போம்
தி.காயத்திரி- கவலையின் முடிவிலி
இதயராசன்- முரண்பாடு

மொழிபெயர்ப்புக்கவிதை
----------------------------------------------------------
மஹ்முட்டர்வீஷ் -மண்ணின் கவிதை (தமிழில் மணி)
ஸீகன்த பிராச்சார்ய லால் ஸலாம்-செவ்வணக்கம் (தமிழில் சிவானந்தம்)

சிறுகதைகள்
--------------------------------------------------
ஸ்ரீ- எப்போதோ நடந்த போர் பற்றி எங்கேயோ ஒரு உரையாடல்
செவ்வந்தி- ஒரு ஓப்பதல் வாக்கு மூலம்
சோ.ஆதர்சனன்- சோமு பொடி
ச.முருகானந்தன்- தாய்


தொடர்நடைச்சித்திரம்
-------------------------------------------------------------------------
மாவை.வரோதயன்- வலிகாமம் மண்ணின் மைந்தர்கள் குழந்தை குமாரசாமி


விந்தை மனிதர்
---------------------------------
புவன ஈசுவரன்- குருநாதர் குஷ்வந்த்சிங்
ஆதவா.சு.சிந்தாமணி- அட்சய பாத்திரம் எங்கே?

சிங்கள மொழி பெயர்ப்புக்கதைகள்
-------------------------------------------------------------------
எரிக் இளையப்பாராச்சி- ஆசிரியர் ஒருவரின் காதல் (தமிழில் சி.சிவசேகரம்)

பின் வரலாற்றியல் தொடர்கதை
----------------------------------------------------------
ஜெகதலப்பிரதாபன்- ஆங்கிலேயனின் பரிசு 8 நாடு திரும்பற் படலம்

கட்டுரை
------------------------------
க.கைலாசபதி- ஏனிந்த தமிழுணர்ச்சி
சி.சிவசேகரம்- பாட்டும் பயனும் ( பாட்டும் செய்யுளும்)

விமர்சனம்
--------------------------------------
செ.சக்திதரன்- இப்சனின் 'தலைமைக் கட்டடக்காரன்'

முன் அட்டை ஓவியம் நசியும் வெளியை விடுவிக்கும் விதமாய் அதிகாரங்களைச் சாடுகிறது. மொழிபெயர்ப்புக் கவிதைகள் பல்வேறு செய்திகளை தருகின்றன. கூடுதலாகன தமிழ்க் கவிதைகள் அதிகாரங்களை சாடுகின்றன. புத்தக வடிவமைப்பில் இன்னும் செம்மையை ஏற்படுத்தலாம். எழுத்தருக்களின் அளவுகள் எழுத்துருக்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தாள்கள் முகப்பு மற்றும் பின் பக்கம் என்பன நேர்த்தியுடன் இருக்கின்றன. எளிமையான வாசிப்புத் தளத்தில் பயணிக்கும் தன்மையுடன் தாயகம் வருகிறது. அதன்படி தொடர்ந்து தாயகம் இதழின் சீரான வருகையும் வலிமையான குரலும் தனித்து தெரிகிறது
----------------------------------------------------

“கலைமுகம்” அமைதியாக பதிகிறது

--------------------------தீபச்செல்வன்
----------------------------------------------------------------------------------------------------------------------
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “கலைமுகம்” ஜனவரி –ஜீன் 2008 இதழ் வெளி வந்திருக்கிறது. சமூகத்தினதும் கலை இலக்கியங்கினதும் மெல்லிய முகத்தோடு செம்மையடைந்த ஒரு கலை இலக்கிய இதழாக வந்திருக்கிறது. படைப்புகள் கூட மெல்லிய முகங்களையும் செம்மையையும் கொண்டிருக்கின்றன.

கட்டுரைகள்
-----------------------------
சு.குணேஸ்வரன் - புலம்பெயர் சஞ்சிகைகள்
ராசு – தேவதைகளின் மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்புகளும் தற்கொலையும்
கா.சிவரூபன் - பனையிடைவெளி(ஒளிப்படக் காட்சி)
சி.ரமேஷ் - உள்முக அபத்தமும் அதன் இயங்கு நிலையும்( 20ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ்க் கவிதைகள்)
செவ்வந்தி – கவிய சம்பிரதாயம் (கவிதையியற் பள்ளிகள்) ஆங்கில மூலம் நிர்மல.ஜெயின்
இ.ஜீவகாருண்யன் - ஈழத்து நவீன இலக்கிய விமர்சனம்:ஆழ் நோக்கிற்கான ஆரம்பக் குறிப்புக்கள்
குப்பிழான்.ஜ.சண்முகன் - பத்தி எழுத்தக்கள்
மகிழன் - பல்வேறு சிறப்பக்களும் கொண்டமைந்த திருமறைக்கலாமன்றத்தின் கூத்த விழா-2007(ஒரு பார்வை)
தபின் - சமகாலத்துடன் இணைந்து நின்ற தலமைக் கட்டடக்காரன் நாடகம்

தொடர்
--------------------------------
சௌ ஜன்யஷாகர்-சுவைத்தேன்-05 சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள்
யோ.யோண்சன் ராஜ்குமார்- திருமறைக் கலா மன்றத்தின்-கடல் கடந்த கலைப் பயணங்கள்-பயணம்3

கவிதைகள்
------------------------
அனார் - பருத்திக்காய்கள் வெடிக்கும் நாள்
சைத்திரிகன் -காதலர்களைப் போல இருத்தல்,காதலியைப்போல முத்தமிடல்
அ.அனுஷானி – நான் ஒரு புத்தகம்
தீபச்செல்வன் - மேசைக்கு கீழே புகைந்த சிகரட்,
நிலவு தேடிய குழந்தை,
அறையை விட்டுப் போன பல்லி,
பறவை மிருகமாகியது.
பெரிய ஜங்கரன் - இருண்மை, தூசு தட்டதல் ,சிதறும் தத்தவங்கள்
ஜோ.ஜெஸ்ரீன் -அவல நிறம்

சிறுகதைகள்
-------------------------------
குகபரன் - தாய்மைக்காக
நிர்மலன் - வழிகாட்டிகள்

பத்தி
-------------------------------
ஆ.சுரேந்தின் - பரிமாற்றம்


நேர்காணல்
-----------------------------------
சிற்பி-சிவவரவணபவன் சந்திப்பு:இயல்வாணன்

புத்தக அறிமுகம்
----------------------------------
நிலான்,கிருத்தியன் -ஒரு கடல் நீரூற்றி(பஹீமாஜஹான் கவிதைகள்)
இராகவன் -எல்லாப்பூக்களும் உதிர்ந்து விடும்(அலறி கவிதைகள்)
தி.செல்வமனோகரன- குறிப்பேட்டிலிருந்து..(அ.யேசுராசா இலக்கியக்கட்டுரைகள்)
பா.இரகுவரன்- உதிரிகளும்…(குப்பிழான் ஜ.சண்முகன் கதைகள்)
ம.ஜெயந்திரன்- பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்(யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் கதைகள்)

இவைகளுடன் நிகழ்வுகள்,பதிவுகள்,கடிதங்கள்,அஞ்சலிகள் முதலியனவும் இடம்பெறுகின்றன.

கலைமுகம் இதழை வடிவமைப்தில் காணப்படுகின்ற நுட்பங்கள்அதனை ஒரு செம்மையடைந்த இதழாக காண்பிக்கின்றன. அதிலும் இந்த இதழில் கூடுதல் நேர்த்தியும் ஒழுங்கும் காணப்படுகின்றது உள் எழுத்துருக்களின் அளவுகளும் எழுத்துருவும் தெளிவாக ஒழுங்குடன் இருக்கிறது. துலைப்புகளுக்கு ஒரு சில ஒறறுமைத்தன்மையுடைய எழுத்துருக்களை பாவித்திருக்கலாம். புத்தக வடிவமைப்பில் அலங்காரத்தனமான எழுத்துருக்கள் வெறுக்கப்படுகின்றன. அவை வாசிப்பில் அலுப்பையும் காலம் கடந்த தன்மைகளையும் ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் இது பற்றிய முன்மாதிரிகளுடன் கலைமுகம் வடிவமைக்கப்படுகிறது.

கலைமுகம் தொடர்ந்தும் உரிய காலத்தில் வெளிவருவதுடன் கூடுதல் செம்மையினை பெற்று சமூகத்தின் அரசியலின் ஊடாட்டங்களின் வலிய குரலோடு வெளிவரவேண்டும். எனினும் காலத்தின் முகம் அறிந்து அமைதியாய் சமூகத்தை பதிவு செய்கிறது கலைமுகம் இதழ்.
----------------------------------------------------------------

Tuesday, June 10, 2008

அகதியாய் அலைகிற கால்கள்

_______________________________
ஷிப்லி கவிதைகள்
எழுதியவர்:தீபச்செல்வன்

`````````````````````````````````````````````````````````````````````````
அகதியாய் அலைகிற கால்களின் வலிகளோடு ஷிப்லியின் “நிழல் தேடும் கால்கள்” கவிதைப் புத்தகம் வந்திருக்கிறது. போரின் தாக்கம் சமூகத்தின் விளைவுகள் காதலின் பிரிவு முதலிய தன்மைகளோடு எழுதப்பட்டிருக்கும் இந்த கவிதைகள் எளிமையான சொற்களை அடுக்கி உருவாக்கப்பட்டிருப்பதுடன் சாதாரண வாசகர் தரப்பினரை இலக்காக கொண்டிருக்கின்றன. ஒரு ‘ஜனரஞ்சக கவிதைப்புத்தகம’; என்ற தன்மையுடன் ஷிப்லியின் கவிதைகளும் புத்தகமும் அமைந்திருக்கிறது.

இதழ்களையும் பத்திரிகைகளையும் கவிதை மற்றும் இதர எழுத்தக்களுக்காக நம்பியிருக்கும் ஒரு சூழல் நிலவி வருகிறது. நாங்கள் எழுதுகிற கவிதைகளை இன்று அவைகளே தீர்மானித்து விடுகின்றன. சங்ககால கவிதைகள் அதிகாரத்திலிருந்தவர்களால் தொகுக்கப்பட்டதாய் கூறப்படுகிறது. ஏனைய காலங்கள் எல்வாவற்றிலும் அதிகாரத்திலிருந்தவர்களினதும் தொகுப்பாளர்களினதும் கொள்ளைகளிற்கு உட்பட்டே தொகுப்புகள் நடைபெற்றிருக்கின்றன.

இன்றும் இதழ்கள் பத்திரிகைகள் அதிகாரத்திலிருப்பவர்களின் தணிக்கை அதிகாரங்களோடு வெளியிடப்படுகின்றன. அல்லது அவைகளை அதிகாரங்கள் அச்சுறுத்துகின்றன. ஷிப்லியின் கவிதைகள் நான் மேலே கூறிய தணிக்கைகளை கருதி எழுதப்பட்டிருந்தன. அவற்றின் மத்தியில் தணிக்கையுடன் வெளிவந்திருக்கின்றன. சிலது அவற்றை மீறியும் எழுதப்பட்டிருக்கிறன்றன.

ஒரு படைப்பு எந்த தணிக்கையுமின்றி பிரசுரிக்கப்படுகிறபோதுதான் அந்த எழுத்து வருகிற சமூகத்தின் அசலான தோற்றம் புலப்படுகிறது. எனவே தணிக்கை செய்யப்பட்ட படைப்புக்களை வைத்து நாம் அசலான சமூகத்தை எப்படி எங்கு தேடுவது என்ற கேள்வி எழுகிறது.

தனது போக்கு ஜனரஞ்சகப்போக்கு என்று கூறகிற ஷிப்லி அத் தன்மையுடைய கவிதைகளைத்தான் எழுதவேண்டும் என்றும் தீhமானித்து எழுதுகிறார். சமூகம்மீதான அனுதாபமாய் அமைகிற அவரது போர்க்கவிதைகள் பாதிப்பு என்ற தன்மையை விடுத்து பார்வை என்ற தன்மையுடன் காணப்படுகிறது. மண்வாச் போர்க்களமும் சில பூக்களும் முதலிய கவிதைகள் போர் பற்றி எளிமையாக பேசுகின்னறன.

வாழ்வையும் பொழுதையும் மனிதர்களையும் துப்பாக்கிகள் ஆளுகிற சூழலில் வாழும் அடக்குமுறை ஷிப்லியின் வாழ்வுச்சூழலாய் கவிதையிலிருந்து புலப்படுகிறது. ஷிப்லியின் கவிதைகள் அகதிச்சமூகத்திலிருந்து வெளிப்படுகின்றன. அகதியாய் அலைகிற நம்மைப்போன்ற ஷிப்லியின் சமூகம் அதன் கொடுமைகளை எல்லாத்தரப்பின் மீதும் அறைந்து விடுகிற தன்மையும் தனக்குள் தானே சொல்லி விமமுகிற தன்மையும் காணப்படுகிறது.

”பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய்
மண்வாசனையை
தேடும்போதுதான்
ஊயிர் கருகுகிறது”


(மண்வாசம் 40 )

‘வாழையடி வாழையாக’ என்ற கவிதை அரசியல் அதிகாரங்கள் தொடர்ந்து சனங்களை வதைக்கிற தன்மையை பேசுகிறது. அதிகாரம் என்பது ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்து சனங்களை வதைக்கிறது. சனங்களை வதைக்கிற அரக்கனை கொல்ல மீளமீள அவன் பிறக்கிறான் என்கிறாhர் இவர்
“எல்லாம் கொஞ்ச நேரம்தான்
இவனை எரித்து
சாம்பலாக்கு முன்னே
வந்து விட்டான்…
அடுத்த அரக்கன்”


(வாழையடி வாழையாக 48)

அலுத்துப்போன அரசியல் விடயங்கள் பற்றியும் நம்பிக்ககை கொள்ளுகிற சமூகத்தின் முகங்கள் பற்றியும் கவிதைகள் பேசுகின்றன.

“எதற்கோ
எங்கோ
எப்படியோ
நீண்டு கொண்டிருககும்
இதுவெல்லாம்
ச்சே…
ஒரு பயணமா? ”

(நிழல் தேடும் கால்கள் 50)

“ஊரில்
மீண்டும்
வசிக்கப்போகும்
எங்கள் கனவுகளையும்
நம்பிக்கைகளையும்
யாரால்
என்ன செய்ய முடியும்”

(இன்னும் சில நம்பிக்கைகள் 43)


போர் அகதியாய் அலைத்துவிட் துயரமும் அரசியல் ஏமாற்றிவிட்ட அனுபவங்களும் என்று ஷிப்லி போன்றவர்களின் கவிதைகள் அவர்கள் சமூகத்திலிருந்து வருகிறதைக்காணாலாம்.

அரசியல் தவிர ஷிப்லியின் கவிதைகள் சமூகம் மீதான அடிபாடுகள் ஊட்டப்பட்டகவிதைகள் இந்தப்புத்தகத்pல் நிறைய இருக்கின்றன. உலகத்தை இருட்டு உலகம் என்கிறார் இவர். நடைமுறை வாழ்வில் சந்திக்கின்ற மனதர்களிடையே அவர்களால் நிரம்பியிருக்கும் உலகத்தினரிடையே அடிபட்டுக்கிடக்கிற ஒரு மனிதனாயும் ஷிப்லியின் கவிதைகள் காணப்படுகின்றன. “மரணத்தை தவிர விடுதலை இல்லை” என்று எஸ். போஸ் எழுதியது போல எழுதுகிறார் ஷிப்லி.

“மரணத்தின் திசைநோக்கி
நடக்கிறேன்
மிக மிகத் தெலைவில்
என்னை வரவேற்றுக்
காத்திருக்கிறது அது..”


(இருட்டு உலகம் 16)

மனிதர்களால் பலியிடப்படுகிற உலகம் பற்றி கோபமும் சில கவிதைகளில் வெளிப்படுகின்றன. சிலர் உலகத்தையும் மனிதர்களையும் கையாளுகிற விதம் வேறு சிலரை பாதிக்கிறது அது சிலவேளை சரியாக அல்லது தவறாக இருக்கலாம் ஷிப்லி தனது அவதானத்திலிருந்து எழுதுகிறார்.

“எத்தனை ஜோடிகள்
இருந்தென்ன
யாராலும் ரசிக்கப்படாமல்
சகலக் கடலும்
விரிந்த வானமும்”

(காலிமுகத்திடல் 20)

மனிதாபிமானம் தீர்ந்தஉலகத்தில் கை ஏந்தித்திரிகிற ஏழைச்சனங்களின் கண்ணீர் பாதிப்பிலிருந்து வருகிற அவருடைய ஒரு கவிதை சமூகத்தில் கேள்விகளை விட்டுச்செல்கிறது.

“எங்கள் பாத்திரங்களில்
எப்போதாவது விழும்
சொட்டுச் சொட்டாய்
மனிதாபிமானம்..”


(ஏழையின் கண்ணீர் 25)

கருக்கலைப்பு பற்றிய அவருடைய கவிதை உயிரை அறைகிற மற்றொரு கவிதையாகும். மருத்தவங்கள் நவீன மருத்துவங்கள் சத்திர சிகிச்சை முதலியன மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட போது கருக்கொலை போல மனிதன் தன்னைத்தானே கொலை செய்கிற வேலையையும் செய்கிறான்.

“தொப்புள் கொடிகளே
தூக்குக் கயிறுகளாகின்றன
இந்தக் கருக்கலைப்பில்..”


(கருக்கலைப்பு 31)

பெண் பற்றியும் ஷிப்லி கவிதைகள் எழுத முனைந்திருக்கிறார். கவிதைகள் அனுபவத்தின் மொழியும் வடிவமும் என்ற வகையில் பெண் பற்றி ஷிப்லி எழுதுகிற ‘நானும் ஒரு பெண்’ என்கிற மாதிரியான கவிதைகள் கேள்விகளின் வயப்பட்டவை. பெண் அடைக்கப்பட்டிருப்பதை காணுகிற ஒரு சிறை மீதான இவரது கவிதை

“அதனுள்
உறைந்து கிடந்த
எதிர்காலம் மீதான
அவைகளின் நம்பிக்கையும்
சுதந்திர அறைகூவலும்
எவருக்குமே கேட்கவில்லை..”

(கிளிகள் பெண்கள் சுகந்திரம் 37)

என்று காணப்படுகிறது. இத்தொகுப்பில் மேலும் ‘பெண்மை போற்றி’ போலவும் வேறும் சில கவிதைகள் இடம்பெறுகின்றன.

அடுத்து காதல்பிரிவு அதன் வலிகள் ஊடு செல்கின்றன ஷிப்லி கவிதைகள். காதல் கவிதை எழுதுவது தொடர்பான முயற்சி மொழியையும் வாசிப்பையும் இலக்கிய செம்மையற்ற –சாத்தியமற்ற நிலைக்க கொண்டு சென்றிருக்கிறது. மேலோட்டமான சொற்களாலும் ஆழமற்ற உணர்வுகளாலும் வருகிற காதல் கவிதைகளின் சூழலில் அவைகள் ‘கவிதைகள் இல்லை’ என்று அதிலிருந்து பலர் விடுபட்டிருக்கிறார்கள். காதல் கவிதைகள் தொடர்பில் உணர்வுபூர்மான கவிதைகளும் வருகிறதை காணலாம். ஷிப்லியின் காதல் கவிதைகள் காதல் பிரிவு மீதான வலியுடனும் எதிர்ப்புணர்வுடனும் காணப்படுகின்றன.

கவிதைகள் நுட்பமான சொற்களினால் இணைக்கப்படுபவை, அடுக்கப்படுபவை அல்லது பின்னப்படுபவை என்று கூறப்படுகிறது. கவிதையில் சொற்களே முக்கியம் பெறுகின்றன எனவும் கூறுகிறார்கள். கவிதையில் நிரம்பியிருக்கும் அழகான வித்தியாசமான சொற்கள்தான் கவிதையை தீர்மானிக்கின்றன. ஷிப்லியின் கவிதைகளில் புதுமையான சொற்களை காண முடியவில்லை பழக்கப்பட்ட சொற்களைத்தான் கையாளுகிறார். ஆழகியலான மொழியையும் ஆழமான படிமங்களையும் காணமுடியவில்லை. அவைகளிலிருந்து விடுபட்டு சாதாரணமாய் எழுதவேண்டும் என்று ஷிப்லி நினைக்கிறார்.

ஷிப்லி கவிதைகள் அவரின் தொடக்கக கவிதைகள் என்றே கூற வேண்டும்.
“போனது போகட்டும்
வெட்டப்பட்ட
நகங்களை விடுத்து
விரல்களை பாதுகாப்போம்”


என்ற அடிப்படையுடன் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதுவரை ஷிப்லி தனது பார்வையின் வாயிலாகவே தனது கூடுதலான கவிதைகளை எழுதி வந்திருக்கிறார். அவற்றில் இன்னும் நுட்பங்களைசெலுத்தி தனது அனுபவத்திலிருந்து தனக்களிலி
ரந்து புதிய வடித்தோடும், புதிய சொற்களோடும் இனி அவர் எழுதும் கவிதைகள் அவரது புதிய அடையாளத்தோடு நமக்கு வரப்போகிற நம்பிக்கையை ‘நிழல் தேடும் கால்கள்’ கவிதைப் புத்தகம் தருகிறது.
----------------------------------------------------------------------------

Monday, May 5, 2008

எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !

எழுதியவர்___________________________
மாவனல்லை. எம்.ரிஷான் ஷெரீப்,

கவிதைகள் எப்பொழுதுமொரு தனித்துவமான அழகியலைக் கொண்டிருப்பவை.எழுதுபவரது வாழ்வும்,வாழ்வின் சூழலும்,தாக்கங்களுமே கவிதைகளாகப் பிறப்பெடுக்கின்றன.கவிதைகளின் பாடுபொருளும்,அவற்றின் எளிதில் புரிந்து கொள்ளமுடியுமான வரிகளும் கவிதைக்கும்,வாசிப்பவருக்குமிடையிலான நெருக்கத்தை உண்டுபண்ணுபவை.எழுதியவரின் மகிழ்ச்சி,துயரம்,இன்ன பிற உணர்ச்சிகளும் வாசிக்கும் நபரின் மேல் ஒரு போர்வையாகப் படியும்.
அவ்வாறான ஒரு துயரத்தின் உணர்வை தீபச்செல்வனின் 'கீறல் பட்ட முகங்கள்' வலைப்பூவில் அவர் பதிந்திருக்கும் அவரது கவிதைகளில் காணலாம்।இவ்வலைப்பூ துயரங்களைச் சொல்லும் ஆவணங்களின் கவிதைகளைக் கொண்டிருப்பவை।பெரும் புற்றுப் போலப் படர்ந்து வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி,வாசிப்பவரை விழிகசியச் செய்பவையாக இருக்கின்றன இவரது பெரும்பாலான கவிதைகள்.

இவரது 'கிளிநொச்சி' தலைப்பிலான கவிதை சமாதான ஒப்பந்தம் முறிக்கப்பட்டதன் பிற்பாடு திரும்பவும் பதுங்குகுழிக்கு மீண்ட வாழ்வை மிகத் துயருடன்,எளிதில் புரிந்து கொள்ள முடியுமான மொழியில் பேசுகிறது.கவிதையின் சில வரிகள்,

எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.

நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்.


எனச் சொல்லி, இப்படி முடிக்கிறார்.
நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.

பசிக்கிறது.
கொஞ்சமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்

மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.
இதே வலியை இவரது 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' கவிதையும் பேசுகிறது.இதில் யுத்தப்பிரதேசங்களின் சூனியங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான துயரத்தாலாட்டுக்கள் கண்ணீரால் பாடப்பட்டிருக்கின்றன.

ஒருவேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும.?

குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிறம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது

குழந்தைகளின் புன்னகைகளை
நிலங்களின் அடியில்
புதைத்து வைத்துவிட்டு
நாம்
நசுங்கிய எதிர்காலத்தோடு
அமர்ந்திருக்கிறோம்
என்று துயருருத்தும் வரிகளால் தொடங்கி,

ஏன் இது
ஒரு ஈழக்குழந்தையாக
இங்குவந்து பிறந்திருக்கிறது?
அதுவும் இந்தப் பதுங்குகுழியில்
கண்ணை விழித்திருக்கிறது?
எனது குழந்தையின் அழுகை
நாளை இந்நாட்டின்
தேசிய கீதமாய் மாறலாம்
என இவர் முடிக்கையில் சுடும் துயரம் படர்ந்த யதார்த்தத்தின் சாரலானது வாசிப்பவரது மனங்களில் வலிக்க வலிக்கச் சிதறுகிறது.

இவரது 'வெளிக்கு நகரும் மரங்கள்' சாபங்கள் சூழ்ந்த யுத்தத்தின் சாயலைப் பேசுவதோடு தற்போதைய இயற்கையின் பசுமைச் சீரழிவையும் பேசுவதாகவே படுகிறது.

நான் எந்த மரங்களையும்
நாட்டாதவன்
அந்த மரங்களுக்கும்
நீர் ஊற்றாதவன்.

எனக்காக வழங்கப்பட்ட மரங்களே
பறிபோய் அழிகிறபொழுது
கோடரிகளைத் தடுக்க இயலாதவன்.
அப்படியாயின் எனக்கு
வெம்மை தானே பரிசளிக்கப்படும்.
நிழல்தீர்ந்த எரிந்த காட்டின்
தணலில்தான்
நடக்கவிடப்படுவேன்.

நாளைக்கு எனது பிள்ளைகள்
நிழலுக்காகத் துடிக்கிறபொழுது
நான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்
யாரிடம் நிழலுக்குக் கையேந்துவேன்.

என்னால் அவர்கள் அலையப்போகிறார்கள்
அவர்களின் தலை
நிழல் இன்றி கருகிற பொழுது
இந்த வெம்மையையா வைத்து
குடைபிடிக்கப்போகின்றேன்

எனக் கேட்கிறார்.

'நீயும் நமது குழந்தைகளும்' கவிதையானது யுத்தத்தின் இரு தரப்புப் படைகளின் மனிதம் நிரம்பிய முகங்களையும்,சமாதானத்துக்கான அவாவையும் பேசுகிறது.சமரினால் பாதிப்புறும் குழந்தைகளின் பாடல் ஆயுதங்களால் கரையும் உலகத்தைப் புரிய வைக்க முயற்சிக்கிறார்.
எனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
உனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
நமது குழந்தைகள்
நமது தோள்களின்
பயங்கர வெளிக்குள்
நித்திரையின்றி திரிகிறார்கள்.

முற்றங்களுக்காக எல்லைகளுக்காக
வெளிகளுக்காக
முகங்களை பகிர்வோம்

நாம் புன்னகைக்கலாம்
எனக்கும் புன்னகை மீது
மொய்ப்பதே விருப்பம்
உனக்கும் கூட என்கிறாய்
நாம் நாமாக
புன்னகைக்க வேண்டும்
அதற்காக
முதலில் நமது முகங்களில்
வழியும் பயங்கரத்தை
துடைப்போம்...........

உனக்கும் எனக்குமான
வெளியின் பயங்கரத்தில் உலவும்
நமது குழந்தைகள்
முற்றங்களை குழப்பிவருகிறார்கள்............

நமது குழந்தைகளின்
வீடுகள் சிதையாமலிருக்க வேண்டும்
பயங்கரமில்லாத
ஒரு முற்றம்
அவர்களுக்கு அவசியம்.
என இவர் முடிக்கும்போது தீராதவலியொன்று நெஞ்சில் இடறுகிறது.இதே போன்றதொரு உணர்வை இவரது 'பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்' கவிதையும் தருகிறது.
பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன..........
பாட்டி சொல்லும் கதையின் வரிகளாக இவர் எழுதும்
மண்டை ஓடுகளின் குவியல்கள்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.

மேலுள்ள வரிகள் நம்பிக்கையை விதைக்கின்றன.

'குட்டிமானின் புள்ளிகள்' எனும் தலைப்பில் இவர் வடித்திருக்கும் கவிதை, யுத்தம் சூழும் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மக்களின் வாழ்வியலையும்,மக்களின் வலிகளில் கண்ணீர் தொட்டு வரையப்பட்ட துயர ஓவியங்களையும் மானின் மருட்சிப் பார்வைக்கு ஒப்பிட்டு வெளிக்காட்டுகிறது.

அந்த குட்டிமானை யாரோ
துரத்திக்கொண்டிருக்கிறான்
துரத்திக்கொண்டு வருபவன்
இராமனாக இருக்கலாம்
இரவணனாக இருக்கலாம்
மான்மீது
சீதையும் ஆசைப்பட்டிருக்கலாம்
சூர்ப்பனையும் ஆசைப்பட்டிருக்கலாம்.

குட்டிமானின் கண்களிள்
தவிப்பு பெரியளவில்
ஊறி சிந்திக்கொண்டிருந்தது.........
எனத் தொடரும் கவிதையில்,
இப்பொழுது மானாகவே தெரிகிறது
மானின் காலடியில்
பொறிகள் இருக்கலாம்
கால்சுவடுகளில் பொறிகள் முளைத்திருக்கலாம்.
மானே பொறியாக இருக்கலாம்..........
ஆகிய வரிகள் சமரின் ஆயுதங்களும்,அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி,கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
கால்கள் இடருப்பட
கால்களை விரித்து ஒதுக்கி
மான் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது
மானாக மாறியவர்களும்
மானிற்கு ஆசைப்பட்டவர்களும்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

காடுகள் நீண்டு பரந்திருக்கின்றன.

இப்பொழுது
மானைப்போலவே
எல்லோருடைய கண்களிலும்
தவிப்பு பெரியளவில் சிந்துகிறது.
என முடித்திருக்கும் இவ்வரிகளில் மானின் மருட்சியும்,உயிர் பிழைத்து வாழ்வதற்கான அவாவும்,மக்களின் ஏக்கமும் ஒன்றாகவே பிரதிபலிக்கிறது.

இவரது 'இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப்பறவை' கவிதை நிகழும் யதார்த்தத்தினைச் சுட்டி ஒரு சமூகத் துயரத்தின் கீதமாக உயிரினில் கசிகிறது.இதன் இறுதி வரிகள்
இன்றோடு தீரும்
சிறிய துண்டு
மெழுகு வர்த்தியின்
சுவாலையின் கடைசித்துளி மீதில்
ஒரு வெள்ளைவான்
ஒளிந்திருக்கிறது.
தற்காலத்தில் சகோதர,சகோதரிகள் கடத்தப்பட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கும் அதே வெள்ளை நிற வாகனம் பெரும் வலியைச் சொல்கிறது.

அர்ஜென்றீனாவில் காணாமல் போன இளைஞர்களின் அன்னையர்கள் சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகளை மீட்க கடதாசிச் சைக்கிள்களை செய்து காட்சிக்கு வைத்தபடி போராடினார்கள். பின்னர் அந்த அன்னையர்களில் பலரும் காணாமல் போயிருந்தார்கள்.

எனக் குறிப்போடு இவர் எழுதியிருக்கும் 'நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்' கவிதை கடல் தாண்டிய நாடொன்றின் காயங்களை உரத்துப் பேசிடினும் யுத்தப்பிசாசின் ஆட்சிகளில் மூழ்கியிருக்கும் அத்தனை நாடுகளுக்கும் ஒத்துப் போகிறதாக அமைகிறது.

கிளிநொச்சிக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு பின் தங்கிய கிராமத்தின் குளக்கரையோரம் இவருக்கு,இவரது நண்பரோடு சில நேரங்களைச் செலவிட நேருகிறது.அப்போது நிகழ்ந்துகொண்டிருந்த காட்சிகளை மிக அழகாகச் சொல்லும் 'முறிப்புக்கிராமம்' கவிதை இவரது கவிதைகளிலேயே யுத்தத்தின் வாடை அதிகளவு படியாத கவிதை எனலாம்.

இவரது வலைப்பூவில் காயங்களின் வலியைச் சொல்லும் துயரத்தின் கவிதைகளே அதிகம் உள்ளன.அவை மிக அழுத்தத்தைத் தரவல்லன.இதன் மூலமே மனதுக்கு நெருக்கமானவராக இவரும்,இவரது கவிதைகளும் ஆகி விடுகின்றனர்.
--------------------------------------------------------------------------------
நன்றி
---------------------------------------------------------------------------

Saturday, March 22, 2008

யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று கலை இலக்கிய சமுக இதழ்கள்

------------------------------------தீபச்செல்வன்
முற்றுப்பெறாத கட்டுரை....
#தாயகம்
#கலைமுகம்
#ஜீவநதி

யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று கலை இலக்கிய சமமூக இதழ்கள் வெளிவருவது மிகவும் வியப்புக்கும் மகிழ்வுக்குமான செய்தியாகும். தாயகம் கலைமுகம் ஜீவநதி என மூன்று இதழ்கள் வருகின்றன.

கலைமுகம்-முன்மாதிரியான இதழ்


கலைமுகம் இதழை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.ஒரு நவீன கலை இலக்கிய சமூக இதழ் என்ற சஞ்சிகைக்கான முன்மாதிரியான தன்மையுடன் காணமுடிகிறது. படைப்புக்களை தெரிவு செய்து இதழை அமைத்திருப்பதில் மிகவும் நேர்த்தியிருக்கிறது. திருமறைக் கலா மன்றத்தினரால் வெளியிடப்படுகின்ற 'கலை இலக்கிய சமுக' இதழ் என்ற தன்மையை தெளிவாக காணமுடிகிறது.
"இணையம் கதையாடல்களுக்கான புதியவெளி" என்ற கட்டுரையை கரன் எழுதியிருக்கிறார். இணையத்தளம் மற்றும் வலைப்பதிவுகளிள் ஊடாக முக்கியம் பெறுகிற கலை இலக்கிய சமுக அரசியல் வெளி பற்றிய கட்டுரையாக அது காணப்படுகிறது.

அந்தக்கட்டுரையோடு, தார்மிகி-திருமறைக்கலா மன்றம் நடத்திய தமிழ் விழா, அம்மன்கிளி முருகதாஸ்-பாரம்பரிய அறிவியலில் பழமொழிகள்-விவசாயம் தொடர்பான தமிழ்ப்பழமொழிகள், சண்முகம் சிவலிங்கம்-எஸ். புஷ்பாநந்தனின் இரண்டு கார்த்திகைப்பறவைகள்-கவிதைத் தொகுதியை புதிய புதிய விமர்சன ஆய்வுக்குட்படுத்தல், மதுரா-திருமறைக்கலா மன்றம்-கலைத்தூது கலையம் திறப்புவிழா -15.08.2007சனன்,- இலக்கியத்திற்கான நோபல் பரீசு-2007-நோபலின் அரசியலில் கவனம் பெறும் மற்றோரு உலகம்-டொறிஸ் லெஸ்ஸிங்,சைத்திரிகன்-லா.சா.ராமாமிருதம்-இசையின் உன்மையை உணர்தல் -அஞ்சலி, இங்கர் பெர்க்மன்- கைவிடப்பட்ட ஆன்மாக்களுக்க அருகில்- அஞ்சலி, வேல்.தஞ்சன்-புலமைப்பரிசில் பரீட்சை சமுகத்திற்கு அசாதாரண தன்மையாகின்றதா?-ஒரு நோக்கு, மகிழன்- இராமநாதன் நுண்கலைக்கழக மாணவர்களின் வர்ண மொழி - கண்காட்சி ,An Award to aflying artiste-Alfi முதலிய கட்டுரைகள் இருக்கின்றன.

கவிதைகளை அனார்- அனார் கவிதைகள்-குரல் என்றொரு நதி அல்லது திராட்சை ரசம், நான் பெண், அறைக்கு வெளியே அலைகிற உறக்கம்,உக்கிரம் முதலியகவிதைகள்., ம.பா.மகாலிங்கசிவம்-போர் என்பது கவிதை, செ.திருநாவுக்கரசு-அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் கவிதை, ம.பா.மகாலிங்க சிவம்- சாவே சமன் செய்யும் கோல்,தழுவல் கவிதை, சித்தாந்தன்-சித்தாந்தன் கவிதைகள- மெய் உறங்கும் நாட்களின் கோடை, கை மறதியாய் எடுத்து வந்த மூக்குக் கண்ணாடி, காற்றில் அலைகிற மரணம், குறி சொல்வேரின் கணிப்பில் தவறிய வாய்ப்பாட்டு சித்திரம், நீள் துயரின் அகாலப்பொறி முதலிய கவிதைகள்., துவாரகன்-கண்களைப்பற்றி எழுதுதல் கவிதை , ராசு-சிதைந்த பகலிலொரு நாள் கவிதை,பஹீமாஜஹான் கவிதைகள்- காட்டில் பெய்த மழை, ஊற்றக்களை வரவழைப்பவள் கவிதைகள், த.ஜெயசீலன்-வரண்டுபோன வாழ்க்கை, இரண்டு கவிதைகள்-த.அஜந்தகுமார்-பேசியபடிஇருத்தல், ஞாபகங்களின் அச்சக்கோடுகள் முதலிய கவிதைகளும் கவிதைப் பகுதியில் வெளியாகியுள்ளன. இதில் அனனார், சித்தாந்தன், துவாரகன், அஜந்தகுமார், பஹீமாஜஹான் முதலியோரின் கவிதைகள் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் முக்கியம் பெறுகின்றன.

சிறுகதைகள்-குப்பிழான்.ஜ.சண்முகம்-கண்டறிதல் -என்ற ஒருகதை வந்திருக்கிறது. பத்தி எழுத்துக்கள்-விபரீதன்-பிள்ளை நேயம் என்ற கற்பிதமும் தண்டனைகளாகும் அவமதிப்புகளும்-நடைவழிக்குறிப்பகள்,ஆ.சுரேந்திரன்-பரிமாற்றம் காணப்படுகிறது.

நேர்காணல்-குந்தவை மற்றும் சடாச்சரதேவியை இராகவன் நேர்கண்டிருக்கிறார்.மிகச் சிறந்த பேசவைத்தலுக்கான நுட்பங்களுடன் அந்த நேர்காணல் காணப்படுகிறது.

நெடுவல்-ரதீதரனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரு திரைப்படங்கள் ஒரு நோக்கு-குறும்படம்-கால்,வெட்டை-அறிமுகம்,முதலியவைகளோடு மேலும் பல விடயங்கள் வெளியாகி உள்ளளது.

இதழை வடிவமைத்திருப்பதில் மிக நேர்த்தி காணப்படுகிறது. அட்டை, பக்கவடிவமைப்புக்கள், எழுத்தருக்களை பயன்படுத்திய விதம் என்பன சீரான தன்மையினை கொண்டிருக்கிறது. மிக சிறந்த இதழாக கலைமுகம் வந்திருக்கிறது. அ.ஜீட்ஸன்-அட்டைப்பட கணனி வடிவமைப்பு, கி.செல்மர்எமில்-இதழ்வடிவமைப்பு, பிரதம ஆசிரியர் நீ.மரிய சேவிய அடிகளார்.

இந்த கலைமுகம் ஜீலை டிசம்பர் 2007 காலாண்டு இதழாக 'சமுக கலை இலக்கிய இதழாக வந்திருக்கிறது.
விலை-80ரூபா

தொடர்புகளுக்கு

திருமறைக்கலா மன்றம்,
238 பிரதானவீதி,
யாழ்ப்பாணம்,
இலங்கை.
தொலைபேசி,தொலைநகல்:0212222393
மின்னஞ்சல்: @sltnet.lk


ஜீவநதி-இளையவர்களின் முன்முயற்சி

சின்னராஜா விமலன்,கலாமணி பரணீதரன். முதலிய இளையவர்கள் நடத்த ஜீவநதி கலை இலக்கிய இருதிங்கள் ஏடு வெளிவருகிறது. இதுவரை நான்கு இதழ்கள் வந்திருக்கிறது. தாயகம் இதழ் கொழும்பில் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. கலைமுகம் இதழும் ஜீவநதி இதழும் யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டு வெளி வருகின்றன.

ஜீவநதி-பங்குனி சித்திரை 2008 இதழ் 'பெண்கள் சிறப்பு' இதழாக வந்திருக்கிறது. தனித்துவமான இதழ் வடிவமைப்பு இல்லாது ஞானம் முதலிய இதழ்களைப்போன்ற வடிவமைப்பு மற்றும் எழுத்தருத்தன்மைகளுடன் இந்த இதழ் வருகிறது. இது தனக்கான தனித்தவமான உருவத்தோடு வருவதற்கான முயற்சிகளை எடுக்கப்படவேண்டும். இருந்தாலும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகிற ஒரு இளைய இதழ் என்ற வகையிலும் தற்போது வெளிவருவதிலும் ஒரு முக்கிய தன்மையினை கொண்டிருக்கிறது. இந்த இதழ் "தமிழ் சூழலும் பெண்ணியமும்" என்றஆசிரியர் தலைப்போடு காணப்படுகிறது.

கவிதைகளை: ச.நிரஞ்சனி-இனியாவது, சரங்கா தயாநந்தன்(லண்டன்)-எனது கனவில் சிரித்தவர்கள், தாட்சாயணி-வார்த்தைகள் சூழ்ந்த வாழ்க்கை,டி.எச்.லவ்ரின்(91885-1930) இளம் மனைவி-கெக்கிறாவ ஸீலைஷா -மொழிபெயர்ப்புக்கவிதை, சுகிர்தராணி-பெரும்பாம்பு, கி-பிறைநிலா-சோகமும் சுகமாய் மாறும் -அறிமுகம், மைத்திரேயி-பாசம் முதலிய கவிதைகளும் காணப்படுகிறகின்றன.

கட்டுரைகள்- மனோன்மணி சண்முகதாஸ்-ஈழத்துப் பெண்படைப்பாளிகள்-சில குறிப்புகள், அம்மன் கிளி முருகதாஸ்-பெண்களின் பாடல் ஆக்கதிறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள், க.தங்கேஸ்வரி-கிராமியப்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், றஞ்சி(சுவிஸ்)-பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சினைகளும் தமிழ் பெண்களும், செல்வஅம்பிகை நடராசா-செம்மொழித்தமிழில் பெண்களின் புலமைத்தவம்-ஒளவையார்,ஜெயலஷ்மி இராசநாயகம்-பெண்களும் தலைத்துவப்பண்பும், றஞ்சி(சுவிஸ்)-சர்வதேசப்பெண்கள் தினம் மார்ச்08,சந்திரகாந்தா முருகானந்தன்-பால்நிலை பாரபட்சம் ஒழியாதவரை பெண்ணிய இலக்குள் எட்ட முடியாது, சௌந்தரி (அவுஸ்ரேலியா)கலாச்சார மாற்றம் முதலிய கட்டுரைகள் இருக்கிறன்றன.

சிறுகதைகளை: கார்த்திகாயினி சுபேஸ்-உதயம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம்-சீதனம் கொடுத்தால்..,கெக்கிறாவ ஸகானா-உண்மை-பெண்மை,ஆழியாள்(அவுஸ்ரேலியா)-ஒரு குட்டி இளவாசியுடனான வானவில் நாட்கள் முதலியோர் எழுதியிருக்கிறார்கள்.

இவைகளோடு கருத்துரைகள்,கலைஇலக்கிய நிகழ்வுகள்,பேசும் இதயங்கள், முதலிய பகுதிகளும் காணப்படுகின்றன. இதழ் வடிவமைப்படன் படைப்புக்களை தெரிவு தெய்வதில் கூடிய அக்கறை தன்மையினை எடுக்க வேண்டியதின் தன்மையினை சுட்டிக் காட்டவேண்டும்.தெணியான், குப்பிழான்.ஜ.சண்முகம்,கி.நடராஜாமுதலியோர் இந்த இதழின் ஆலோசகர்களாயிருக்கிறார்கள். இளையவர்களினால் முன்னெடுக்கப்படுகிற இந்த எழுத்து உழைப்பு முயற்சியினை ஊக்கப்படுத்தி நாம் பங்களிக்க முன்வரவேண்டிய தேவையும் உள்ளது.

விலை-50ரூபா

தொடர்புகளுக்கு
ஆசிரியர்இ
கலைஇகம்இ
சாமணந்தரை ஆலடிப்பிள்ளையார் வீதிஇ
அல்வாய்.


தொலைபேசி: 0775991949. 0776991015
தொலைநகல்: 0212263206
மின்னஞ்சல்:

தாயகம்-போரும் பெரும் துயரும்

தேசிய கலை இலக்கிய பேரவையின் வெளியீடான தாயகம் 68(ஜனவரி-மார்ச்)கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் யாழ் இதழாக வெளி வருகிறது. நாட்டின் பேர் நெருக்கடிகளின் மத்தியில் தாயகம் இதழை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த இதழது உழைப்பினால் அது ஒரு சீரான வருகையுடைய இதழாக கவனம் பெறுகிறது.
இந்த இதழின் ஆசிரியர் தலைப்பு"போரும் பெருந்துயரும்"என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது। "....சமாதானத்திற்கான மேசை விரிப்புகள் விரித்த உலக நாடுகள் போருக்கான ஆயுதங்களை வழங்க முன் வந்துள்ளன. தீர்வு முயற்சிகளை தூரப்போட்டு விட்டு போர்ப்பிரகடனங்களுடன் போர் தொடங்குகிறது...."என்று ஆசிரியர் தலையங்கம் தொடர்ந்து செல்லுகிறது."ஈழத்தமிழரை விட்டு இனிமலேசியத்தமிழர் பற்றிப்பேசலாம்" என்ற தலைப்புடன் மலேசியத்தமிழரின் பிரச்சினை பற்றி தொடர்ந்து எழுதப்பட்டிருக்கிறது. சமகால பிரச்சினைகள் பற்றி எந்தவித பிரக்ஞையும் அற்று பழைய மரபுகளுடன் வருகிற ஒருசில இதழ்களின் மத்தியில் தாயகம் இதழின் ஆசிரியர் தலைப்பானது தொடர்ந்து பிரச்சினைகள் பற்றி துணிந்து பேசுவதாகவும் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
முன்பக்கத்தில் காணப்படும் ஓவியமும் போரின் துயரத்தை வெளிப்படுத்துகிறது. உற்று அவதானிக்கையில் பல்வேறு வலிகளை புரிந்துகொள்ளமளவில் பரந்து விரிகிறது அந்த ஓவியம். இதழின் பின்பக்க ஓவியமும்கூட சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. இதழின் உள்பக்க வடிவமைபர்புக்களும் கையாளப்பட்டுள்ள எழுத்துக்களும்கூட குறிப்பிடத்தக்க அளவு ஒழுங்கை கொண்டிருக்கிறது.

கவிதைகள்:த.ஜெயசீலன்-வழமையான நாட்கள்,தி.திருக்கமரன்- சுதந்திரம் தருகிற சோகம், அழ.பகீரதன்-தகுமோ,சிவசேகரம்-சிலந்தி பற்றிய ஒரு சிந்தனை, பேரறிஞ்சன்-தீ வானத்தின் தின்னை, குறிஞ்சி நாடன்- வானம் பொறுக்குமோ, எஸ்.இ.பி.பாலமுருகன்-கனவுகள் தொலைதூரம்,கவிஞர் துரையப்பா-கண்ணதிலே ஈரமதாய்,சி.ஜெயசங்கர்-பயங்கரவாதம், நிலாகீற்றன்-மீட்கப்படட் மேதினியிலே,தி.கலைச்செல்வி- பாலைவனத்தின் சாயலா?,சை.கிங்ஸ்லிகோமஸ்-நெடுங்கவிதை,முதலிய நமது நாட்டுக்கவிதைகளும் இடம்பெற்றிருக்கிறது.
சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளை தாயம் இனம் கண்டு தமிழில் வாசிப்புக்கு தருகிறது கனான் அஷ்ரவி -ஏறத்தாள நான்கு வயதான குழந்தையின் நாட்குறிப்பு, எமஸ்ரெல்டா டவிலா-மலைகளில் லால் சிங்டில்-தாய்நாடு,)இ{இன்கிலிஷ்}அரசநைட சரமலளநசவேர்கள்(ஆபிரிக்கஈ அமெரிக்க கவிதை)-உhயசடழவவந றயவளழn ளாநசஅயn,{இன்கிலிஷ்}அகுமட்ஷம்லுர்- இந்த மூட்டுச் சந்தியில் முதலிய கவிதைகளை சிவசேகரம்,சோ.பா,குழந்தை.மா.சண்முகலிங்கம்,மணி முதலியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
உதாரம்......
கட்டுரைகளளை ஏகலைவா-எங்கோ நடந்ததும் இங்கே நடப்பதும்,சிவசேகரம்-படைப்பிலக்கியமும் பல்கலைக்கழகமும்,ஜெ.சற்குருநாதன்-மலையக சமூக அசைவியக்கமும் பண்பாட்டு நகர்வும் ஆகியவை எழுதப்பட்டள்ளது.அர்ஜென்ற்றீனாவில் அன்றும் அமரிக்காவில் இன்றும் -புஷ்கற்கவேண்டிய பாடங்களும் நாம் கற்கவேண்டிய பாடங்களும் என்ற கட்டுரை பயங்கரவாதத்திற்கு எதிரான போரை என }000000000000000{பற்றி குறிப்பிடுகிறது. சிவசேகரத்தின் கட்டுரை வாசிப்பின் போதாமை மற்றும் சிந்தனை தேக்கம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஜெ.சற்குருநாதனின் கட்டுரை ஈழமலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி குறிப்பிடுகிறது.
சிறுகதைகளை திக்குவல்லைகமால்-உழைப்பு,அயிராமி-எல்லை தாண்டல்,ந.பீ.அருளாநந்தம்-உலகத்தின் முதல் எதிரி,வனஜா நடராஜா- நிரபாதி,சிறீ-பட்டுத்தெளிந்தது. முதலியவைகள் வந்திருக்கிறது.

இவைகளோடு மாவை வரோதயனின் -பரந்தன் பாலசிங்கம்-நடைச்சித்திரமும்,சு.க.நடேசமூர்த்தி-ஊரும் சீரும்-உன்மைக்கதையும்,மணி தமிழில் மொழி பெயர்த்த தெய்வ சித்திரம் மொழி பெயர்ப்பு சிறுகதையம்,புவனஈசுவரன் சுந்தர காண்டம்,ஆதவா அ.சிந்தாமணி குறளி விளையாட்டு -விந்தை மனிதர் வடிவ எழுத்தும் ,தாயகம் இதழ் பற்றி திருக்கமரன் சுபாஷினி சந்திரகுமார், முதலியோர் எழுதிய விமரிசனங்களும் இவைகளுடன்நிகழ்வு,நீத்தார் நினைவு,கண்காட்சி முதலிய பகுதிகளும் காணப்படுகின்றன.இதழை வெளியிடுவதிலும் வடிவமைப்பதிலம் நெருக்கடிகளும் குறைபாடுகளும் காணப்படும் சூழலில் தாயகம் ஈடு கொடுக்கம் முகத்தோடு தொடர்ந்து வருகிறது.

தொடர்புகளுக்கு:
க.தணிகாசலம்,
ஆடியபாதம் வீதி,
கொக்குவில்.

தொலைபேசி:0212223629,0112335844


மின்னஞ்சல்: thajakam@gmail.com,thayakam@yahoo.com

இணையம்: .thajakam.com
----------------------------------------------------------------

Wednesday, March 12, 2008

பசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை

------------------------------------------------------------
பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்

சிறுகதை விமர்சனம் -----------------------------------------___________________________
--------------------------தீபச்செல்வன்

பசியோடும் இருளோடும் வாழுகின்ற சனங்களின் கதையாய் "பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள் "என்ற சிறுகதைத் தொகுதி வந்திருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் எழுதிய இந்த சிறுகதைகள் மேலும் சொல்லியிருக்க வேண்டிய வெளிகளும் குரல்களும் இருக்கின்றன என்றே படுகிறது. இருந்தாலும் இன்றைய சூழலில் இக்கதைத்தொகுதி "ஒரு தனியன் இறுமாப்படைகிறான் "என்கிற மாதிரியான குரலோடு முக்கியம் பெறுகிறது.

பல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது। முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைகூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது. த.அஜந்தகுமார்,தீபச்செல்வன்,திருச்செநதூரன்,ச.நிரஞ்சனி,ந.வினோதரன்,மயூரரூபன் போன்ற ஒருசிலரையே காணமுடிகிறது. அப்படிப்பார்க்கையில் எழுத்துச்சூழலுக்கான தொடக்கமாக இந்த கதைத்தொகுதியை கருதமுடிகிறது. ஆபத்தையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி எழுகிற எழுத்துக்களாக இந்த எழுத்தக்களை பார்க்கலாம்.

இந்த தொகுதியில் இடம்பெறும் கதைகளை ச.நிரஞ்சினி,ப.உதயசாந்தினி,சி.கோகிலவாணி,த.அஜந்தகுமார்,ந.வினோதரன்,ந.மயூரரூபன்,க.சிவதாரணி,சி.சிவாகர்.ஜெ.கவிதா முதலியோர் எழுதியிருக்கிறார்கள்

"உதிர்வு" என்ற கதையை ச.நிரஞ்சனி எழுதியிருக்கிறார். இதுவரையில் அவர் எழுதிய கதைகளிலிருந்து இது சற்று வித்தியாசப்படுகிறது. நவீன பெண்ணிய கதைகளுக்காளன தன்மைகளை கதை கொண்டிருக்கிறது. விண்மீனை பெண்ணென்றும் முகிலை ஆண் என்றும் குறியீடுபடுத்தகிற கதையில் பெண்ணை உரசிவிட்டு தட்டிக்கழித்து சொற்களாலும் நடைமுறைகளாலும் நெருக்குகையில் எழும்பும் ஒரு பெண் எழுத்தாய் கதை அமைகிறது. நவீன பெண்எழுத்துக்கான மொழியையும் நடைமுறைப்பாங்கையும் ஓரளவு கொண்டிருக்கிறது. தற்காலத்தில் ஈழத்தில் எழுதத்தொடங்கிய புதிய செம்மையடைந்து வரும் எழுத்தாளராக நிரஞ்சனி காணப்படுகிறார்.
"ஒரு தனியன் இறுமாப்படைகிறான்" என்ற கதைக்கு கைலாசநாதன் வரைந்த ஓவியம்

தொகுதியில் இடம்பெறும் மற்றொரு முக்கிய கதையாய் "ஒரு தனியன் இறுமாப்படைகிறான்" என்ற கதையை குறிப்பிடலாம். கிராமத்திற்குரிய புழங்கு மொழியை கதை கதையாடுகிறது. கிராமத்திற்குரிய கதை பேசும் முறை இயல்பாக காணக் கூடியதாயிருக்கிறது. மேலால் கதையை வாசிக்கையில் ஒருகதை புலப்படுவதைக்காணலாம். விவசாயி ஒருவனின் விவசாய வாழ்வில் குறுக்கிடுகிற மிருகங்களின் நாசங்களையும் அவைமீதான போரிடலையும் கதைபேசுகிறது. இன்னொருவிதத்தில் நாசப்படுத்தப்படுகிற ஒரு இனத்திற்குரிய செழுமையான போரிடலாகவும் கதை தெரிகிறது. புரட்சிர சமுகத்திற்குரிய குரலிடும் குறியீடாய் கதைத்தொகுதியில் இந்த கதை முக்கியம் பெறுகிறது. அதற்கான மொழியும் கதைச்சூழலும் சொல்லப்படுமுறையும் வாய்த்திருக்கிறது.

அடுத்து "பரிகாஷைக்காரனின் சுற்றோட்டத்தில் குதிரைக்காரன்" என்ற கதையை குறிப்பிடமுடியும். நவீன சிறுகதைக்கான அல்லது ஒருமுறைக்கான முயற்சி என்கிறார் அருந்தாகரன். ஆனால் ரகுநாதன் அதை இருண்மைத் தன்மை கொண்ட கதை என்கிறார். நானும் இதை சற்று வித்தியாசமான ஒரு நவீன சிறுகதைக்கான முன் தன்மையுடைய தாகவே நினைத்தேன். காதல் பற்றிய சொற்களுடனான சுய சம்பாஷனையும் உணர்வுமாக கதை அமைகிறது. ஒரு சிறிய புள்ளிப்பொழுது விரிகிற சொற்களின் ஓட்டமாய் கதை நிகழ்கிறது. கதையாடுவதும் கவிதைத்தன்னமை தன்மையுடையதுமாக கதை நகர்கிறது. கதையின் மொழி இறுக்கமும் அழகியலும் கொண்டிருக்கிறது.
சாதாரண மகக்களுக்கு புரியாத தன்மை ஒருவேளை கதை இருண்மைத்தன்மை உடையது என்ற தன்மையின் கீழ் விடலாம். த.அஜந்தகுமாரின் இந்தக்கதை இத்தொகுதியிலிருந்து தனிமைப்பட்டு சிலரால் முக்கியப்படுத்தப்படுகிற தன்மையும் சிலரால் இருண்மை என்று ஒதுக்கப்படுத்துகிற தன்மையும் கொண்டிருக்கிறது. சிறிய துண்டை விரித்து கதையாடிவரும் இந்தக்கதை ஏனோ முழுமை பெறாத ஒரு குறையுணர்வை கதை வாசித்து முடிக்கையில் ஏற்படுத்திவிடுகிறது.

அடுத்து இக்கதைத் தொகுதியின் தலைப்பாய் பிரதி முன்படுத்தும் "பசியடங்கா இருளிலிருந்து" கதையை பார்ப்போம. பசியடங்கா இருளிலிருந்து என்ற கதை யாழ்பாணத்தில் நிலவுகிற பசியையும் இருளையும் பெரியளவில் கொண்டிருக்கும் என்ற எதிபார்ப்பு வெற்றிடமாயிருக்கிறது. ஆனால் கதை இருள் பற்றி பெரியளவில் சொல்லுகிறது. யாழ்ப்பாணத்தில் நிலவிய மின்சாரத்துண்டிப்புகளும். விளக்கு அணைப்புகளும் இருளை பெரும் கொடுரமாக பார்க்கும் தன்மையை உருவாக்கி இருக்கிறது.

இந்தக் கதை இருள்மீதான பயத்தையும் இருள் சூழ்கிற குரூரத்தையும் பற்றி எழுதப்பட்டிருக்pறது. இருள் மூடிய பொழுதுகளை கதை விரித்து சொல்லுகிறது. பசி மிக மெல்லியதாகவே கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. விபரிக்கப்பட்ட காட்சிகளின் பின்னால் சொல்லப்படாத கதைகள் ஒளிந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கதை நவீன சிறுகதைக்கான தன்மையை இலேசாக கொண்டிருக்கிறது. கதையாடுகிற மொழியில் இத்தன்மையை காணலாம். இந்தக்கதையை ரகுநாதன் இருண்மைத்தன்மை உடையதாய் குறிப்பிடுகிறார். கதையில் ஒரு இருண்மைத் தன்மை மறைந்திருப்பதை காண முடிகிறது. கதை முக்கியப்படுத்தப்படுகிற தொகுதியாக இருக்கிற பொழுதும் திருப்தி அளிக்காகாத தன்மையினை கொண்டிருக்கிறது.

"இழப்புகள்" என்ற கதை ஏ-9 பாதை மூடப்பட்ட முடப்பட்ட பின்னர் நிலவிய பசியின் கொடுரம் பற்றியதாக இருக்கிறது. மிக எளிமையான மொழியில் கதைஅமைகிறது. பாதைபூட்டப்பட்ட பின்னர் பசியின் துயரத்தால் ஒரு குடும்பம் அனுபவிக்கிற துன்பங்களை சொல்லுகிறது. பிள்ளையை அநாதரவாக சேர்ஜ்சில் விட்டுச்செல்லுகிற அளவில் உளவியல் ரீதியாக பாதிப்படைகிற தந்தையை பற்றி கதை இடம் பெறுகிறது. உளவியல் ரீதியாக பாதிப்படைந்திருக்கும் சமுகத்திற்கு தேவையான உளவியல் ஆற்றுதல் பற்றிய தன்மையை முன்வைக்கிறது "பசியடங்கா இருளிலிருந்து" என்ற கதைத்தொகுதியின் தலைப்பை பிரதிபலிக்கும் கதையாக இதைப் பார்க்கலாம். இந்த தொகுதியின் முக்கியமானதொரு கதையாக இதை குறிப்பிடலாம்.

இவைகளோடு ப.உதயசாந்தினியின் "பதம்" என்ற பெண்ணியம் பற்றியதும் சி.கோகிலவாணியின் "விரட்டப்பட்ட கனவுகள்" க.சிவதாரணியின் "கோடிட்ட இடம்" ஜெ.கவிதாவின் "தாய்மனசு" என்ற சுனாமி இழப்புதொடர்பான கதை முதலிய கதை முயற்சிகளும் தொகுதியில் இடம்பெறுகின்றன. இவர்களின் கதை முயற்சிகள் மொழி.கதையின் பரப்பு. கதையாடும் முறை முதலியவற்றில் குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. இவைகள் நம்பிக்கைகளை ஏற்படுத்துகிறமாதிரியான தன்மையை கண்டடைவதற்கான இடங்களை அவசியப்படுத்துகிறது.

இந்த தொகுதியில்
ச.நிரஞ்சனியின் -"உதிர்வு"
த.அஜந்தக்குமாரின்-"பரிபாஷையின் சுற்றோட்டத்தில் குதிரைக்காரன்"
ந.வினோதரனின்-"ஒரு தனியன் இறுமாப்படைகிறான்"
சிவாகரின்-"இழப்புகள்"
மயூரரூபனின்-"பசியடங்கா இருளிலிருந்து"
முதலிய கதைகள் முக்கியம் பெறுகின்றன.

புத்தக்தில் இடம்பெறுகின்ற ஓவியங்கள் பற்றி முக்கியமாக குறிப்பிடவேண்டும். முன்னட்டை ஓவியம் மிக எளிமையானதாயிருக்கிறது. பசியடங்கா இருளிலிருந்து என்ற ஏக்கத்தையும் ஒடுங்கிப்போயிருத்தலையும் முகத்தில் வெறி எழுகிறதையும் இன்னும் பலவற்றை பிரதிபலிக்கிறது. கதைகளுக்கான உள் ஓவியங்களும்கூட சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. நவீன ஓவியத்தன்மையுடனும் குறியீட்டப்பாஷையுடனும் பல உணர்வுகளை குவிக்கிற தன்மையும் கொண்டிருக்கிறது. ஓவியங்களை கோ.கைலாசநாதன் வரைந்திருக்கிறார்.

புத்தகத்தின் வெளி அட்டையின் எளிமை வரவேற்கத்தக்கது. ஆனால் புத்தகத்தை உள்ளே வடிவமைப்புச்செய்ததில் பல குறைபாடுகள் இருக்கின்றன. பக்கவடிவுகள்.எழுத்துருக்களை பாவித்தவிதம். எழுத்துருவின் அளவுகள். பந்தியமைப்பு. என்பவற்றில் சீரின்மையும் போதியளவிலான ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன. ஓவியங்களால் பெரியளவு இந்த குறைபாடு வாசிப்பை பாதிக்காதிருக்கும் போலுள்ளது.

ஏற்கனவே இரண்டாயிரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் எழுதிய "மண்ணின் மலர்கள்" என்ற கதைத்தொகுதி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தட்சாயினி, ராகவன்,உடுவில் அரவிந்தன்,சிவாணி,பிரியா போன்றோர் எழுதியிருந்தனர். இதில் தட்சாயினி, ராகவன் முதலியோர் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதிவருகின்றமை முக்கிய விடயமாகும்.

கதைகளை செ.யோகநாதன், சோ.ப, குப்பிளான் ஜ. சண்முகம் முதலியோர் தெரிந்திருக்கிறார்கள். கதைகளை ந.வினோதரன் தொகுத்திருக்கிறார். இந்த கதைத்தொகுதி புதிய எழுத்துக்கான தொடக்கமாகும். இவர்கள் நல்ல கதைகளை எழுதுகிறவர்களாகவும் புதிய கதை எழுத்தப்பரப்புக்களை உண்டாக்கிறவர்களாகவும் செம்மையடைய வேண்டும். இன்னும் புதியவர்களும் எழுதத்தொடங்க வேண்டும்.
------------------------------------------------------------------

Wednesday, February 27, 2008

பெண்ணியம் சார்பான இரண்டு குறும்படங்கள்

எழுதியவர்--------------------------------
--------------------------தீபச்செல்வன்
__________________________________________________

01. துடுப்பு-பெண்ணின் வலிமையான பயணம்

ஒரு பெண்ணால் தனித்து பயணிக்க முடியும் என்ற திடத்தை இயக்குனர் ஒரு திடமான பெண்ணின் மூலம் துடுப்பில் காட்டியிருக்கிறார். நிமலா எடுத்துக் கொண்ட பெண்ணும் யேசுதாசன் எடுத்துக் கொண்ட பெண்ணும் நமது சமூகத்தில் அவர்கள் அவதானித்ததின் வெளிப்பாடாக இருக்கின்றது. இதில் முரணான முடிவுகள் என்று எதுவும் இல்லை.படத்தின் தொடக்கத்தில் வரும் கலைப்பருதி எழுதிய அழுவதற்கென்று பூமியில் யாரும் பிறப்பதில்லை... பாடலுக்கு படத்தின் அ றிமுகம் வருகிறது. நம்பிக்கை சார்பான வலுவான காட்சிகள் அதற்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படத்தில் வலிமையான பெண்ணாக வரும் இந்திரா என்ற பாத்திரம் படத்தின் தொடக்கத்தில் தன்னை ஒரு வலிமைப் பெண்ணாக காட்டிச் சொல்கிறாள். அடிக்கு மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமைவாக்கிற்கு ஆனா நான் நகரமாட்டன் என்று ஒரு விதவலிமையை நம்மிடையே விதைக்கிறாள். சுனாமிப் பேரலை காவுகொண்ட உயிர்களில் இந்திராவின் கணவனும் செல்வனின் மனைவி பிள்ளைகளும் அடங்குகிறார்கள். இந்திரா இப்போது அவளின் ஒரே மகனுடன் வாழ்கிறாள். செல்வன் இந்திராவை திருமணம் செய்ய விரும்புகிறான். அவளை எல்லோரும் திருமணம் செய்யும்படி கட்டாயம் செய்கிறார்கள். இதை இந்திரா மறுக்கிறாள்.மீன்பிடி தொழில் செய்ய இந்திரா துணிகிறாள். நீ ஒரு பெம்பிள உன்னாள கடலில இறங்கித் தொழில் செய்ய ஏலுமே... கடத்தொழில நீ நினைச்சுக் கூட பாக்காத... என்று ஊர் தலைவர் கூறி தையல் இயந்திரத்தை கொடுக்க முனைந்த போது தலைவர் நீங்க ஒரு கிணத்து தவளை, இப்ப பொம்பிளையள் எவ்வளவு சாதனை செய்யுறினம் எண்டு உங்களுக்கு தெரியாது என்று அழுத்தமாக கூறுவதும்... எண்ட படகும் கடலில ஏறும்... என்று சபதமிடுவது ஒரு முக்கியமான பதில் கட்டம்.
கணவன் வலைக்கட்ட காட்டிக் கொடுத்ததை மீட்டியபடி தன் நகைகளை விற்று படகு வாங்கி கடலில் இறக்கப்படுகிறது. நிறைய மீன்களுடன் இந்திராவின் படகு கரைசேர்கிறது. அதைப்பார்த்து ஊர்த் தலைவர் வெட்கிப் போவதும் ""இந்திரா உனக்கு கதைச்சு ஒரு படகு வாங்கித் தாரன்'' என்ற தலைவரின் பதிலுக்கு... நன்றி தலைவர் என்னை ஒரு பொம்பிள எண்டு பாக்காம ஒரு தொழிலாளி எண்டு பாருங்கோ.. என்று கூறி தன் வழியில் பயணிப்பதுடன் படம் முடிகிறது. மீண்டும் கலைப் பருதியின் பாடல் வந்து படத்தின் நோக்கு அழுத்தமாக சொல்லப்படுகிறது. அவளின் போராட்டம் எல்லாம் ஒரு ஆணுக்கு நிகராக கடலில் தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்குடையதாக இயக்குனர் காட்டியிருக்கிறார். சமூகத்தின் வசைகளுக்கு மடியாத துணிச்சல் பெண்ணாக அவளை காட்டியிழுப்பதில் செல்வன் என்ற துணை அவளுக்கு அவசியமாக்கப்படவில்லை. இதில் யஸ்மின் கணே "மாமா உட்பட இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு குகதாஸ் காட்சிகளை இயற்கையாகவே பதிவாக்கியிருக்கிறார். அவரின் அவசியமான இடூணிண்ஞுதணீ காட்சிகள் குறித்த உணர்வுகளை சரியாகவே வெளிக்காட்டுகின்றன. படத் தொகுப்பு சிவா. அலங்காரங்கள் எதுவுமின்றி படம் இயல்பாக நகர்கிறது. படத்தின் இசையில் உயர்வில்லை. படத்தின் கதையோட்டத்தையோ பாத்திரத்தின் குணவியல்பையோ எழுச்சியூட்டும் விதத்தில் அமையவில்லை. அதிமுக்கியமான காட்சிகளில் கூட குணாம்சத்தை பிரதிபலிப்பது குறைவாகவே இருக்கிறது. படத்தின் மூலக் கதை என். சிறிதேவியின் உடையது. படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் முல்லை யேசுதாசன். ஒரு பெண்ணின் வலிமையான பயணத்தை எப்படி பயணிக்கலாம் என்பதை துடுப்பு குறும்படம் மூலம் காட்டியிருக்கிறார்.ஈழத்து, சினிமா பற்றி சரியான உரையாடல் இடம்பெறுவதில்லை என்று இராகவன் எழுதியிருந்தார்.இது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ள வேண்டிய விடயமே. தென்னிந்திய சினிமா பற்றிய மாயை நம்மிடம் தலைதூக்கி ஒரு பகட்டான போலி ரசனையை அநேகர் கொண்டிருக்கின்றார்கள். இயல்பானதும் நம்முடைய பிரச்சினையை சொல்வதுமான நமது சினிமாக்களை முதலில் இவ்வாறானவர்கள் ரசிக்க முன்பு பார்க்க வேண்டும். கவிதை, சிறுகதை, நாவல் முதலிய படைப்புகளில் நாம் செலவிடுகிற அக்கறை பிரயோசனமான நமது சினிமாவிலும் ஏற்படுத்துவதை முதலில் கைக்கொள்ள வேண்டும்.

Thursday, January 17, 2008

சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி கவிதைகள்

தமிழ்நதி கவிதைகள் பற்றி கருணாகரன் எழுதிய இந்தக்கட்டுரை பரந்த பார்வையுடையது। விமர்சனம் மேலோட்டத்தனமாக செய்யப்படுவதால் படைப்பாளிகளின் படைப்புக் குறித்த பார்வையில் முழுமைத்தன்மை அற்றுவிடுகிறது। படைப்புபகளின் குறைத்தன்மை அதனை எங்கோ ஒரு பொட்டில்கூட நிறுத்துவதை காண்கிறோம். இது நிறையப்பேரின் அதிருப்தியாகவும் இருக்கிறது. கருணாகரனின் விமரிசனங்கள் கூடுதலாக எழுத்தின் பரப்புகளை மிக நுட்பமாக அவதானத்துப் பேசுகிறது. இதற்கு அவர் எழுதிய பல கட்டுரைகளை குறிப்பிடலாம். இங்கு நான் அவர் தின்னையில் எழுதியிருந்த"சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி கவிதைகள் "விமரிசனத்தை போட்டிருக்கிறேன்.
-----------------------------தீபச்செல்வன்
----------------------------------------------------------------------------------------------------
எழுதியவர்___________________________
--------------------------கருணாகரன்
----------------------------------------------------------------------------------------------------
பனிக்குடம் பதிப்பகம்

பத்தாண்டுகளாக தமிழ்நதி எழுதி வருகின்றபோதும் இப்போதுதான் அவருடைய கவிதைகளை படிக்கக் கிடைத்திருக்கிறது. இது வருத்தந் தருகிற தாமதம்தான். அவரிடம் இதைச் சொல்ல வெட்கமாகவும் இருக்கிறது. அதேவேளையில் இந்தத்தாமதத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு அவருடைய கவிதைகளே சாட்சி.




உலகம் சுருங்கி கிராமமாகிவிட்டது. தொடர்பாடலால் அது விரைவு கொண்டு விட்டது என்றே சொல்கிறோம். சுருங்கியிருக்கும் இந்தக்கிராமத்தில் எல்லாமே எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் கிராமத்திலிருக்கின்ற எல்லாவற்றையும் எல்லோருக்கும் தெரியும் நிலையுண்டு. ஆனால் இந்தக்கிராமத்தில் நாங்களிருக்கிறோமா என்று பார்க்க வேணும். அதாவது தொடர்பாடலால் சுருக்கி கிராமமாக வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் போரில் அகப்பட்டுச் சிக்கித்தவிக்கும் சமூகங்கள் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.




இது இன்று பொதுவாக போர்ச்சூழலில் வாழும் சமூககங்களுக்கு எழுந்துள்ளதொரு முக்கிய சவால். உலகத்தை பொதுமைப்படுத்த விளையும் பண்பார்ந்த செயலில் பலவிதமான தன்மைகளுண்டு. சிலர் மதத்தை வழிமுறையாகக் கொள்கின்றனர். சிலர் பொருளாதார மாற்றத்தை வலியுறுத்திச் செயற்படுகின்றனர். வேறு சிலர் அறிவியல் வளர்ச்சி மூலமாக மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று சிந்திக்கின்றனர். இன்னுஞ்சிலர் ஜனநாயக ரீதியான வளர்ச்சியும் பண்பும் பெருகும்போது மாற்றம் சாத்தியமாகும் என்று நம்புகின்றனர்.




ஆனால் இந்த எல்லா வழிகளுக்குள்ளும் இருக்கும் அதிகாரத்துவமும் குருட்டுத்தனங்களும் இடைவெளியின்மைகளும் எப்போதும் எதிர் நிலைகளை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கின்றன. இந்த எதிர்நிலைகள் நம்பிக்கைக்கு எதிரான கோட்டை அழுத்;தமாக வரைகின்றன. உண்மையில் இந்த வழிகளை இவற்றுக்கான செயல்முறைகள் அடைத்து விடுகின்றன பெரும்பாலும். இதுவொரு மாபெரும் அவலம். இதுதான் தீராத கொடுமை. இதுவே நல்ல நகைமுரணும்கூட.




எந்தவொரு கோட்பாட்டுவாதமும் அதன் செயலால்தான் ஒளி பெற முடியும். அந்தச் செயலில் நிராகரிப்புக்கும் ஏற்றுக்கொள்ளலுக்குமான சமாந்தர விசையும் பயணப்பாதையும் உண்டு. அதாவது நெகிழ்ச்சியும் வெளியும் அவற்றில் இருக்கும். இருக்க வேணும். இல்லாதபோது அது எப்படியோ அடைபட்டுப்போகிறது. அல்லது எதிர் நிலைக்குப் போய்விடுகிறது.




என்னதானிருந்தாலும் மனிதன் ஒரு இயற்கை அம்சம் என்பதை வைத்தே எதையும் அணுகுதல் வேணும். மற்ற எல்லா அம்சங்களோடும் மனிதனை வைத்து நோக்க முடியாது. குறிப்பாக பொருளியல் அம்சங்களுடனும் இயந்திரங்களோடுமான கணிதத்தில் மனிதன் எப்போதும் சிக்காத ஒரு புள்ளியே.




ஆகவே மனித விவகாரத்தில் எப்போதும் பல்வகைத்தான அம்சங்களுக்;கும் இயல்புக்கும் இடம் அவசியம். ஆனால், இந்த இடத்தை பகிர்வதிலும் அளிப்பதிலும் பெறுவதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளும் முரண்களும் எப்போதும் தீராப்பிணியாவே உள்ளது. இது மனிதனைச் சுற்றியுள்ள சாப இருள். இந்தச் சாப இருளின் காரணமாக தமிழ்நதியின் கவதைகளை இவ்வளவுகாலமும் காணாதிருந்து விட்;டேன். அதேபோல இந்தச் சாப இருள்தான் அவருடைய கவிதைகளை மறைத்தும் வைத்திருந்திருந்தது. அதுமட்டுமல்ல தமிழ்நதியின் கவிதைகளும் இந்த இருளின் துயரமும் இதனால் ஏற்படும் அவலமும் அநீதியும் அவற்றுக்கெதிரான நிலைப்பட்டவையும்தான். ஆக இப்போது எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் முடிச்சுகள், கோர்வைகளாக இருக்கின்றன. எனவே இந்தக்கவிதைகளைப் படிக்கும்போதும் இவற்றை அணுகும்போதும் இந்த அம்சங்கள் எல்லாம் சேர்ந்து கலவையாக கிளம்பி வருகின்றன.




சுருங்கியிருப்பதாகச் சொல்லப்படும் இந்த ' உலகக்கிராமத்தை' பொய்யென்கிறார் தமிழ்நதி. அப்படி தகவலாலும் தொடர்பாடலாலும் சுருங்கியிருக்குமாக இருந்தால் எப்படி எங்கள் அவலங்களை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமற்போயிருக்கும் என்பது இந்தக்கவிதைகளின் அடியொலியாகும். தமிழ்நதி இதை எந்தத்தூக்கலான குரலோடும் பேசவும் இல்லை. திட்டவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை. முறையிடவும் இல்லை. ஆனால் தன்னுடைய கேள்வியையும் நிராகரிப்பையும் சத்தமில்லாமல் அறிவார்ந்த முறையில் மெல்ல வைக்கிறார், நம் அருகில். அது எல்லோருடைய கண்ணிலும் மனதிலும் ஊசியைப்போல ஊடுருவிச் செல்லும் விதமாய்.




அதேவேளை, சக மனிதர்களால், அரசினால், இனரீதியாக இழைக்கப்படும் அநீயை எப்படி இந்தத்தகவல் யுகமும் அறிவு உலகமும் ஜனநாயக அமைப்பும் கண்டு கொள்ளமுடியாதிருக்கிறது என்றும் எப்படி இதையெல்லாம் இவற்றால் அனுமதிக்க முடிகிறது என்றும் தன்னுடைய கவிதைகளின் வழியாக பல கேள்விகளைப் பரப்புகிறார் இந்த வெளியில்.




இதன் மூலம் தமிழ்நதி பெண் கவிதைப்பரப்பிலும் ஈழத்துக்கவிதை வெளியிலும் தமிழ்க்கவிதையின் தளத்திலும் தனித்துத் தெரியும் அடையாளங்கொண்டிருக்கிறார். குறிப்பாக சொல் முறையால்- மொழிதலால் அவர் வேறுபட்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கை அமைப்பு அல்லது அதன் அனுபவங்கள் அவரிடம் மிஞ்சியிருக்கும் அல்லது திரளும் எண்ணங்கள் எல்லாம் இங்கே உரையாடலாகியிருக்கின்றன.




குறிப்பாக ஈழத்துக் கவிஞர்கள் பலரதும் அண்மைய (அண்மைய என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளான) கவிதைகளில் இன வன்முறையின் கொடுவலியை யாரும் உணரமுடியும். சண்முகம் சிவலிங்கம், தா. இராமலிங்கம், சிவசேகரம், முருகையன், வ.ஐ.ச. ஜெயபாலன், அ.யே சுராசா, சேரன் போன்ற தலைமுறைகளின் கவிகள் தொடக்கம் இன்னும் இந்த வலியுடைய குரலையே ஒலிக்கிறார்கள். இதில் இடையில் வந்த தலைமுறையைச் சேர்ந்த ஊர்வசி, மைத்திரேயி, ஒளவை, சிவரமணி என்ற பெண் கவிஞர்களும் இத்தகைய தொனியிலும் வலியிலுமான கவிதைகளையே தந்தார்கள். அதிலும் போரும் வாழ்வு மறுப்பும் அகதி நிலையும் இதில் முக்கியமானவை.




இந்த அகதி நிலை இரண்டு வகைப்பட்டது. ஒன்று உள்@ரில் இடம்பெயர்ந்து அலைதல். அருகில் வீடோ ஊரோ இருக்கும். ஆனால் அங்கே போக முடியாது. அதுவும் ஆண்டுக்கணக்கில் அங்கே போக முடியாது. அதெல்லாம் சனங்களைத் துரத்திவிட்டு படையினருக்காக அத்துமீறி அரசாங்கம் கைப்பற்றி வைத்திருக்கும் பிரதேசங்களாகும். அப்படிக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சரைவை மூலம் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலான சுவீகார சட்டம் வேறு. ஆனால் அப்படி கைப்பற்றிய பிரதேசத்துக்கான நட்ட ஈட்டைக்கூட அது கொடுக்கத்தயாரில்லை.




தவிர, போரில், படையெடுப்புகளின் போது நிகழும் அகதி நிலை. இடம் பெயர்வு. இதைவிடவும் புலம் பெயர் அகதி நிலை வேறு. இது வேரிழந்த நிலை. அந்நியச் சுழலில் அந்தரிக்கும் கொடுமையான அவலம். தமிழ்நதி இவை எல்லாவற்றையும் தன் மொழியில் பிரதியிடுகிறார். தமிழ்நதியின் பிரதியில் இனவன்முறைக் கெதிரான பிரக்ஞையும் அகதித்துயரும் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அவருடைய பிரக்ஞை இவற்றில்தான் திரண்டுள்ளது.




இது குறித்து அவருடைய சில அடையாளங்கள், அதாவது இத்தகைய வாழ்நிலையின் பின்னணியில் தமிழ்நதியின் கவிதைகள் இயங்குகின்றன. தமிழ்நதி அரசியற் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிறார். இந்தத் தொகுதியின் முதற்கவிதையும் இறுதிக்கவிதையும்கூட அரசியற் கவிதைகள்தான். அதிலும் இந்த அரசியலைத் தீவிரமாகப் பேசும் கவிதைகள்.




முதற்கவிதையில் அவர் எழுதுகிறார்,




நேற்றிரவையும் குண்டு தின்றது


மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது


சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்


குழந்தைகளுக்குப் பாலுணவு தீர்ந்தது


???..


???..








பூட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி


பசியோடு அலைந்து கொண்டிருக்கின்றன


வளர்ப்புப்பிராணிகள்


சோறு வைத்து அழைத்தாலும்


விழியுயர்த்திப் பார்த்துவிட்டுப் படுத்திருக்கும்


நாய்க்குட்டியிடம் எப்படிச் சொல்வது


திரும்ப மாட்டாத எசமானர்கள் மற்றும்;


நெடியதும் கொடியதுமான போர் குறித்து


???..


???..


ஒவ்வொரு வீடாய் இருள்கிறது




இந்தச் செங்கல்லுள் என் இரத்தம் ஓடுகிறது


இந்தக்கதவின் வழி


ஒவ்வொரு காலையும் துளிர்த்தது


???..


???.




மல்லிகையே உன்னை நான்


வாங்கிவரும்போது நீ சிறு தளிர்




இருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்


சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்


எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது


எஞ்சிய மனிதரை


சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை


வேம்பை


அது அள்ளிறெறியும் காற்றை


காலுரசும் என்


பட்டுப் பூனைக்குட்டிகளை




என்று. அதைப்போல இறுதிக்கவிதையில்,




வேம்பின் பச்சை விழிநிரப்பும்


இந்த யன்னலருகும்


கடல் விரிப்பும்


வாய்க்காது போகும் நாளை


இருப்பின் உன்னதங்கள் ஏதுமற்றவளிடம்


விட்டுச் செல்வதற்கு


என்னதான் இருக்கிறது






எனச்சொல்கிறார். இந்தக்கவிதை தாயகத்தின் இடம் பெயர்தலைச் சொல்கிறது. சொல்கிறது என்பதை விடவும் அதை அது பகிர்கிறது. அந்த நிலையை அது அப்படியே, அதுவாக, நிகழ்த்துகிறது எனலாம். அந்த அந்தரநிலையின் கொடுமுனைத் துயரிது.




முதற்கவிதையில் வரும்




இந்தக்கதவின் வழி


ஒவ்வொரு காலையும் துளிர்த்தது




மல்லிகையே உன்னை நான்


வாங்கிவரும்போது நீ சிறு தளிர்




இருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்


சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்


எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது


எஞ்சிய மனிதரை


சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை


வேம்பை


அது அள்ளிறெறியும் காற்றை


காலுரசும் என்


பட்டுப் பூனைக்குட்டிகளை




என்ற இந்தவரிகள் இதுவரையான இடம் பெயர்வுக்கவிதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதேவேளை, சாதாரணமான வார்த்தைகளால் அசாதாரணமான பகிர்தலை ஏற்படுத்துவன. அகதியாதலின் புள்ளியில் திரளும் துயரத்துளி எப்படி என்பதற்கு, அந்தக்கணம், அந்த மையப்பொழுது, எப்படி வேர்கொண்டெழுகிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியமுண்டா.




நாடோடியின் பாடல ; என்ற இன்னொரு கவிதையில் அவர் எழுதுகிறார்.




உயிராசையின் முன்


தோற்றுத்தான் போயிற்று ஊராசை


போர் துப்பிய எச்சிலாய்ப்


போய்விழும் இடங்களெல்லாம்


இனிப் போர்க்களமே




நாடோடிகளின் துயர் செறிந்த பாடல்


ஏழுகடல்களிலும் அலைகிறது




எந்தத் தேவதைகளைக் கொன்றழித்தோம்


எல்லாத்திசைகளிலும் இருளின் ஆழத்தில்


'அம்மா ' என விம்மும் குரல் கேட்க.




இங்கே ஈழத்தமிழரின் அகதித்துயர் மட்டும் சொல்லப்படுவதாகக் கொள்ள முடியாது. அதற்குமப்பால் உலகமுழுவதுமிருக்கும் அரச பயங்கரவாதம், மதவாதம், இனவாதம், நிறவாதம் என்ற பெரும் பிடிவாதங்களால் அகதிகளாக்கப்பட்ட சனங்களின் துயரமும் அவலமுமே கூட்டிணைவாகியுள்ளது. தமிழ்நதி அகதிநிலையில் வௌ;வேறு கண்டங்களில் அலைந்தவர். அப்படி அலையும்போது அவர் கண்ட பல சமூகங்களின் நாடோடி வாழ்க்கை அவல முகம் இங்கே இப்படி வைக்கப்பட்டுள்ளது.




உயிருக்கு அஞ்சும்போது, அதற்கு ஆசைப்படும்போது ஊருடனான உறவு, சொந்த நிலத்துடனான உறவு துண்டிக்கப்படுகிறது. ஊரிலிருத்தல், சொந்த நிலத்தில் இருத்தல் மிகமிக ஆபத்தானதாக ஆகியிருக்கிறது, அது எந்தவகையிலும் உத்திரவாதமுமில்லாதது என்பதையிட்டே பெரும்பாலான நாடோடிகள் அப்படி அலைகிறார்கள் என்ற தொனியை இந்தக்கவிதையின் வழி தமிழ்நதி உணர்த்துகிறார்.




அரச பயங்கரவாதத்தையும் அகதி நிலையையும் பேசுவனவாகவே உள்ளன இந்தத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள். அதிலும் புலம்பெயரியின் அலைதலை இவை அழுத்தமான தொனியில் பதிவு செய்கின்றன. அதிகாரமும் தேவதைக்கதைகளும், விசாரணை, பிள்ளைகள் தூங்கும் பொழுது, எழுத்து: விடைபெற முடியாத தருணம், ஊருக்குத்திரும்புதல், திரும்பிச் செல்ல விரும்புகிறேன், இறந்த நகரத்தில் இருந்த நாள், அற்றைத்திங்கள் இப்படிப்பல. இதில் அதிகாரமும் தேவதைக்கதைகளும் என்ற கவிதை இந்தத் தொகுதியிலேயே நீண்ட கவிதையாக உள்ளது. ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, அரச பயங்கரவாதம், அதற்கெதிரான அவர்களின் போராட்டம், அவர்களுடைய இன்றைய நிலை, தொடரும் துயரம், இவை தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை நோக்கி விடப்படும் கோரிக்கை, போராளிகளின் வாழ்க்கை, இவற்றிலெல்லாம் தமிழர்களின் உணர்வுகள் ? என எல்லாவற்றையும் இந்தக் கவிதை பேசுகிறது. ஈழத்தமிழர் அரசியலினதும் சமகால வாழ்வினதும் சரியான தரிசனம் இது.




துயரங்களிலேயே மிகவும் பெரியதும் கொடுமையானதும் அகதிநிலைதான். கொடுவதை அது. அவமானங்களும் புறக்கணிப்பும் அந்நியத்தன்மையும் திரண்டு பெருக்கும் வலி.




ஒரு சுதேசியை விடவும்


பொறுமையோடிருக்கப் பணித்துள்ளன


அந்நிய நிலங்கள்


???..


???..




ரொறொன்ரோவின் நிலக்கீழ்


அறையொன்றின் குளிரில்


காத்திருக்கின்றன இன்மும்


வாசிக்கப்படாத புத்தகங்கள்


நாடோடியொருத்தியால் வாங்கப்படும்


அவை


கைவிடப்படலை அன்றேல்


அலைவுறுதலை அஞ்சுகின்றன




இதுதான் நிலைமை. இதுதான் கொடுமையும். இது இன்னொரு வகையில் மறைமுகமான அடிமை நிலைதான். எந்த உரிமையுமில்லாத இடத்தில் எப்படி நிமிர முடியும். ஆக அங்கே அப்போது எல்லோரிடமும் பணியத்தான் வேணும். அது அடிமை நிலையன்றி வேறென்ன.




தமிழ்நதியின் கவிதைகள் மூன்று விதமான விசயங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று போரும் அதன் விளைவான அலைதலும். இதில் புலம் பெயர்தலும் அடங்கும். மற்றது, அவருடைய கவனம், ஈடுபாடு, இயல்பு என்பனவற்றைக் கொண்ட அவருடைய உலகம். அடுத்தது, பெண்ணாயிருத்தலின் போதான எண்ணங்களும் அநுபவங்களும். ஆக, இந்தத் தொகுதி, தமிழ்நதியின் அக்கறைகளும் அடையாளமும் என்ன என்பதைக் காட்டுகிறது.




கடவுளும் நானும், முடிவற்ற வானைச் சலிக்கும் பறவை, நீ நான் இவ்வுலகம், ஒரு கவிதையை எழுது, யசோதரா, எழுது இதற்கொரு பிரதி, துரோகத்தின் கொலைவாள், ஏழாம் அறிவு, மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு, சாயல ; போன்றவை தமிழ்நதியின் இயல்பைக் காட்டும் கவிதைகள். அவருடைய மனவுலகத்தின் இயங்கு தளத்தையும் அதன் வர்ணங்களையும் திசைகளையும் இவற்றில் காணமுடியும். எதனிடத்திலும் அன்பாயிருத்தலும்; அன்பாயிருக்க முடியாததும்தான் தமிழ்நதியின் இயல்பு. ஆனால் அதையெல்லாம் மூடிப் பெரும் கருந்திரையாக துயரம் படிகிறது அவருக்கு முன்னே.




தொலைபேசி வழியாக எறியப்பட்ட


வன்மத்தின் கற்களால்


கட்டப்படுகிறது எனது கல்லறை




எல்லாப்பரண்களிலும் இருக்கக்கூடும்


மன்னிக்கப்படாதவர்களின்


கண்ணீர் தெறித்துக்கலங்கிய


நாட்குறிப்புகளும் கவிதைகளும ;




(மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு)




சாளரத்தின் ஊடே அனுப்பிய


யசோதரையின் விழிகள் திரும்பவேயில்லை


பௌர்ணமி நாளொன்றில்


அவன் புத்தனாகினான்


இவள் பிச்சியாகினாள்




அன்பே என்னோடிரு அன்பே என்னொடிரு '




.........................


.........................


சுழலும் ஒளிவட்டங்களின்


பின்னாலிருக்கிறது


கவனிக்கப்படாத இருட்டும்.




(யசோதரா)




இந்தக்கவிதைகள் மிக முக்கியமானவை.




அதிலும் யசோதரா கவிதை சித்தார்த்தரை விமர்சிக்கிறது. புத்தர் என்ற ஒளிவட்டத்தின் பின்னால் மறைக்கப்பட்ட அவலத்தையும் உண்மையின் இன்னொரு பாதியையும் கொடுமையையும் அது கடுந்தொனியில் விமர்சிக்கிறது.




யசோதரையையும் புத்தரையும் ஒன்றாகப்பார்க்க முடியுமா என்று யாரும் கேட்கலாம். சித்தார்த்தனின் ஞானத்துடன் எப்படி யசோதரையை கொள்ள முடியும் என்ற கேள்வியை விடவும் இருவருக்குமான உரிமை பற்றியதே இங்கே எழுப்பப்படும் பிரச்சினையாகும். யசோதரையை தனித்தலைய விட்டுவிட்டு புத்தன் ஞானம் பெறுதில் எந்தப் பெறுமானமும் இல்லை என்பது மட்டுமல்ல அதுவொரு வன்முறையுமாகும் என இந்தக் கவிதை முன்வைக்கிறது தன் வாதத்தை.




வரலாற்றில் எப்போதும் பெண்ணினுடைய முகத்தையும் மனதையும் ஆணின் பிம்பம் மறைத்ததாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கு இன்னொரு ஆதாரமாக இந்தக்கவிதையை தமிழ்நதி முன்வைக்கிறார். எதிர் முகம் அல்லது மறுபக்கம் பற்றிய அ;கறையைக் கோரும் குரலிது. இது பெண்ணுக்கு மட்டுமல்ல தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் பொதுவானது.




இதைப்போல பெண்ணிலை சார்ந்து எழுதப்பட்ட கவிதைகளிலும் தமிழ்நதியின் அரசியல் பார்வையையும் மனவொழுங்கையும் காணலாம். ஆண்மை, சாத்தானின் கேள்வி, புதிர், நீரின் அழைப்பு, தண்டோராக்காரன், கடந்து போன மேகம், நினைவில் உதிக்கும் நிலவு போன்றவை பெண்ணரசியலின் கொதிப்பையுடையவை. பொதுவாக தமிழ்நதியின் கவிதைகள் துயர்மொழிதான் என்றாலும் அதை ஊடுருவியும் மேவியும் குழந்தைமை நிரம்பிய இயல்பும் நெகிழ்வும் இவற்றில் குவிந்திருக்கிறது. அவருள் எல்லையின்மையாக விரியும் உலகு இது. அன்பின் நிமித்தமாதல் என்று இதைச் சொல்லலாம். அல்லது எதனிலும் கரைதல்.




இந்தக்கவிதைகளைப்படிக்கும்போது தமிழ்நதியைப்பற்றிய சித்திரம் நமது மனதில் படிகிறது. விரிகிறது. எழுகிறது தெளிவான வரைபடமாக.




இவை தவிர்ந்த பொதுவான கவிதைகளும் உண்டு. யன்னல், கலகக்காரன் போன்றவை இவ்வாறான கவிதைகளுக்கான அடையாளம். இதில் யன்னல ; பசுவய்யாவின் ( சுந்தர ராமசாமியின்) கதவைத்திற என்ற கவிதையின் இன்னொரு நிலை என்றே நினைக்கிறேன். பசுவய்யா கதவைத்திற, காற்று வரட்டும் என்று சொல்கிறார். தமிழ்நதியோ யன்னலை அடைப்பதன் மூலம் உலகத்தைத் துண்டிக்கிறாய ; என்கிறார். பூட்டி வைக்கும் எதனுள்ளும் எவருள்ளும் புக முடியாது வெளிச்சம் என்று இந்தக்கவிதையின் இறுதிவரி, கவிதை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க நிறைவடைகிறது. இங்கே பசுவய்யாவினுடைய உலகமும் தமிழ்நதியின் உலகமும் சில புள்ளிகளில் ஒன்றிணைவதைக்காணலாம். தலைமுறை கடந்த பிறகும் அந்த உணர்வு, அந்த எண்ணம் ஒன்றான தன்மையில் பயணிக்கிறது சமாந்தரமாய்.




தமிழ்நதிக்கு நகுலனிடத்திலும் பிரமிளிடத்திலும் கூடுதல் பிரியமிருக்கிறது. அவருடைய சிறுகதைகளிலும் பத்திகளிலும் கூட இதைக்கவனிக்கலாம். ஆனால், இந்த இருவருடைய பாதிப்புகளை இவருடைய கவிதைகளில் காணவில்லை. பதிலாக பசுவய்யாவின் தன்மைகளே அதிகமாகவுண்டு. ஆனால், மாதிரியோ சாயலோ அல்ல. அவருடைய அணுகுமுறை தெரிகிறது. காற்றில் நடுங்கும் மெழுகுவர்த்தி, யன்னல், நினைவில் உதிக்கும் நிலவு, கூட்டத்தில ; தனிமை போன்ற கவிதைகள் இதற்கு ஆதாரம். சொற்களை ஒழுங்கமைப்பதன் மூலம் தன்னிலையை ஸ்திரப்படுத்துவதில் ஒரு வகையான நுட்பத்தையும் வாசகருடனான உறவையும் உருவாக்கும் திறன் பசுவய்யாவிடம் உண்டு. அதன் இளநிலையில் தமிழ்நதி இருக்கிறார்.




தமிழ்நதியின் பொதுமைப்பட்ட பண்பு அவருடைய பன்மைத்தன்மையினூடானது. சமூக, அரசியல், பெண் அடையாளம் கொண்ட விரிதளம் இது. தன்னுடைய காலத்திலும் சூழலிலும் அவர் கொண்டுள்ள ஆழமான உறவும் கூர்மையான கவனமுமே இதற்குக் காரணம்;. இவற்றை வெளிப்படுத்துவதற்கான கவி மொழியை நுட்பமாக்கியிருக்கிறார் அவர். அதேவேளை இந்த மொழியை நுட்பமாகக் கையாள்வதிலும் கவனம் கொண்டுள்ளார். பெரும்பாலான கவிதைகள் காட்சிப்படிமமாயும் ஒலிப்படிமமாயுமுள்ளன. நுட்பமான சித்திரிப்பின் ஆற்றலினாலே இது சாத்தியமாகியுள்ளது. அவர் சொல்வதைப்போல மொழியின் அதியற்புதம் என்று கொள்ளத்தக்க வெளிப்பாட்டு வடிவமாகிய கவிதையைத் தேர்ந்தெடுக்க நேர்ந்த கணத்தை தமிழ்நதி அதிகம் விரும்புகிறார். அதனால் அவர் தன்னுடைய சித்திரிப்பில் இந்த நுட்பங்களை நோக்கிப்பயணிக்கும் சவாலை விரும்பிக் கொண்டிருக்கிறார்.




தமிழ்நதியின் முதற் கவிதைத்தொகுதி இது. இதில் உள்ள நாற்பத்தியேழு கவிதைகளில் பெரும்பாலானவற்றில் அவர் தன்னடையாளத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார். இது அவருக்கும் வெற்றி. நமக்கும் வெற்றியே. இனிவரும் புதிய கவிதைகள் அவரையும் நம்மையும் புதிய பரப்புக்கு கொண்டு போகலாம்
நன்றி:தின்னை-------------------------------------------------------------------------------